Monday, December 12, 2011

பருவநிலை மாற்றம்: 2015-க்குள் ஒப்பந்தம்

 பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தை 2015-க்குள் மேற்கொள்ள டர்பனில் நடைபெற்ற மாநாட்டில் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் 2020-லிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


 பருவநிலை மாற்றம் தொடர்பாக இப்போது நடைமுறையில் உள்ளது "கியோட்டோ ஒப்பந்தம்'. 2008-ல் இருந்து 2012-க்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்கு குறைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் வகை செய்யப்பட்டது. இந்த அளவானது 1990-க்கும் முன்பிருந்த நிலையாகும். இதன்படி "பசுமை இல்ல வாயுவை' (கார்பன் டை ஆக்ûஸடு) அதிகம் வெளியிடும் நாடுகள் இந்த அளவை எட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


 புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 194 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமையே முடிய வேண்டிய இந்த மாநாட்டின் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் சீனாவின் எதிர்ப்பு காரணமாக 36 மணி நேரம் தாமதமாக முடிவுற்றது.
 இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளே, பசுமை இல்ல வாயுவை அதிகளவு வெளியிடுவதாகவும், இந்நாடுகள்தான் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் கருத்துத் தெரிவித்து. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியாவும். சீனாவும், புதிய கட்டுப்பாடுகளினால் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான மக்கள் வறுமையை எதிர்நோக்க நேரிடும் என்றன.


 இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ஐரோப்பிய யூனியன் தெரிவிக்கும் திட்டத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் என்ன என்பது தெரியாமலே, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை எங்கள் நாட்டினால் பணயம் வைக்க இயலாது என்று தெரிவித்தார். மேலும் தங்களைப் பிணையாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சுற்றுப்புறச் சூழல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைவருக்கும் சமமானதே என்றும் அவர் தெரிவித்தார். தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட, வளரும் நாடுகளின் பொறுப்புணர்ச்சி இவ்விஷயத்தில் குறைவு என்ற வாதத்தையும் அவர் நிராகரித்தார். சனிக்கிழமை இரவு வரை இந்த விவாதம் நீடித்ததால், மாநாட்டின் தலைவரும், தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான மெய்டே நொகானா-மஷாபேன் 10 நிமிட இடைவேளையை அறிவித்தார்.


 இந்த இடைவேளையில் ஐரோப்பிய யூனியனின் ஆணையர் கோனி ஹெடிகார்டு மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஓர் சமரச முடிவை எட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சு நடைபெற்றது. தொடர்ந்து இருதரப்பினரும் 2015-க்குள் ஓர் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டனர். மேலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கென ஏழை நாடுகளுக்கு நிதியளிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதுவரை கியோட்டோ ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது.


 இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சீனப் பிரதிநிதிகளின் தலைவர் ஸி ùஸன்ஹுவா,
 அமையவுள்ள ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பின் விதிகளின்படியே அமையும் என்று தெரிவித்தார்.


 இந்தியாவின் கருத்துகள் குறித்துத் தெரிவித்த ஐரோப்பிய யூனியன் ஆணையர் ஹெடிகார்டு, தனது பொருளாதாரத்துக்கு ஆபத்தான முடிவை எடுக்கும்படி இந்தியாவைத் தாங்கள் வலியுறுத்தவில்லை என்றும், அந்நாட்டின் வளர்ச்சியை முழுமையாக அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார்.
 அதே சமயம் ஒப்பந்தம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் உள்ள 7 மாடி தனியார் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து : 40 பேர் கருகி பலி..

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் 7 மாடி கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் கருகி பலியாயினர். முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்ட கட்டிடம் என்பதால் மளமளவென பரவும் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறினர். கொல்கத்தாவின் டாகுரியா பகுதியில் ‘அம்ரி ஹாஸ்பிடல்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. மேற்கு வங்கத்தில் பிரபலமான இமாமி மற்றும் சாச்சி தொழில்நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவான மருத்துவமனை இது. இந்த மருத்துவமனையில் பிரதான கட்டிடமும் அதையொட்டி 7 மாடி அனெக்ஸ் கட்டிடமும் உள்ளது. 7 மாடி அனெக்ஸ் கட்டிடம் முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்டது. இங்கு ஐசியூ, ஐசிசியூ, ஐடியூ மற்றும் கிரிடிக்கல் கேர் யூனிட் என உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவுகள் உள்ளன. 

இந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் சென்ட்ரலைஸ்டு ஏசி மெஷின்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இன்று அதிகாலை இந்த தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. சம்பவம் நடந்த போது ஏசி கட்டுப்பாட்டு அறையில் யாரும் இல்லாத காரணத்தால் தீப்பிடித்தது பற்றி ஊழியர்களுக்கு உடனடியாக தெரியவில்லை. கீழ் தளத்தில் பிடித்த தீ, முதல் தளத்துக்கு பரவிய பிறகுதான் ஊழியர்கள் உஷாரானார்கள். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் 250 வீரர்கள் விரைந்தனர். போலீஸ் கமிஷனர் ஆர்.கே.பச்நந்தா தலைமையில் போலீஸ் படையும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு பணியை முடுக்கி விட்டனர். 

அதற்குள் கட்டிடத்தின் 3 தளங்களில் தீ பரவி விட்டது. 7 தளங்களிலும் கரும்புகை சூழ்ந்தது. முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்ட கட்டிடம் என்பதால் ஜன்னல், கதவு என எல்லா இடங்களிலும் வழிகள் தடை செய்யப்பட்டிருந்தன. இதனால் மருத்துவமனையில் சிக்கிய நோயாளிகள் உடனடியாக வெளியேற முடியாமல் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு நோயாளியாக வெளியே கொண்டு வந்தனர். தீயில் 60க்கும் அதிகமான நோயாளிகள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து உறுதியான தகவல் இல்லை. மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நோயாளிகளுக்கு அந்த மருத்துவமனையிலேயே டாக்டர்கள் செயற்கை சுவாசம் அளித்தனர். பலர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டிடத்தின் 3வது தளம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நகர வளர்ச்சி துறை அமைச்சர் பிர்ஹத் ஹக்கீம், தீயணைப்பு துறை அமைச்சர் ஜாவத் கான் ஆகியோரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். கட்டிடத்தில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் எளிதாக எல்லா தளங்களுக்கும் தீ பரவியதாக அமைச்சர் ஜாவத்கான் தெரிவித்தார். இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்திருப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தீ முழுமையாக அணைக்கப்பட்டு அனைத்து தளங்களையும் தீயணைப்பு வீரர்கள் பரிசோதித்த பின்னரே இறப்பு குறித்த முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். நோயாளிகள் மட்டுமின்றி டாக்டர்கள், ஊழியர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். தீ பிடித்த கட்டிடத்தில் இருந்த நோயாளிகள் நிலை குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனையில் ஒருவரும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்து அவர்கள் மருத்துவமனையின் ரிசப்ஷன் பகுதியை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

தலைநகரமாக அறிவித்து டெல்லிக்கு இன்று 100 வயது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தலைநகர் டெல்லிக்கு இன்று 100 வயது பூர்த்தியாகிறது. இதனையொட்டி டெல்லி நகர மக்களுக்கு மக்களவையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மொகலாயர் காலத் தில் இந்தியாவின் தலைநகராக டெல்லி இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா வந்ததும் முதலில் கொல்கத்தாவை தலைநகராக வைத்து அவர்கள் ஆட்சி செய்தனர். கடந்த 1911ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி டெல்லியை இந்தியாவின் தலைநகராக ஆங்கிலேய அரசு அறிவித்தது. இந்தியாவின் தலைநகராக டெல்லி அங்கீகரிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று காலை மக்களவை கூடியதும், தலைநகர் டெல்லியின் 100வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் டெல்லி மக்களுக்கு சபாநாயகர் மீராகுமார் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியாவில் மிகப்பெரிய நகரமாக டெல்லி உருவாகியிருப்பதை நினைவு கூர்ந்தார். மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நகராக டெல்லி விளங்குகிறது. உலக அளவில் மிகவும் பசுமையான தலைநகரங்களில் ஒன்றாகவும், உலக தரம் வாய்ந்த கட்டமைப்புகளுடன், பழமையான நினைவுச்சின்னங்கள் நிறைந்த நகரமாகவும் டெல்லி விளங்குகிறது.

பீரங்கி ஓட்டிய முதல் இந்திய குடியரசு தலைவர்

பீரங்கி ஓட்டிய முதல் இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல்
ராஜஸ்தானில் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் 500 மீட்டர் பீரங்கியை 15 நிமிடங்கள் ஓட்டி பீரங்கி ஓட்டிய முதல் இந்திய குடியரசு தலைவர் என்ற பெருமை சேர்த்தார். இதற்கு முன் சுக்கோய்-30 ரக போர் விமானம், எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் ஆகியவற்றிலும் ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 7, 2011

புதிதாக 6623 ஆசிரியர் பணியிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


தமிழகத்தில் 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 710 ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட உயர்நிலைப் பள்ளிகளாக 2011-12ம் ஆண்டில் தரம் உயர்த்தவும், இந்த உயர்நிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 பட்டதாரி ஆசிரியர் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடம், தலா 1 ஆய்வக உதவியாளர் வீதம் 710 ஆய்வக உதவியாளர் பணியிடம், தலா 1 இளநிலை உதவியாளர் வீதம் 710 இளநிலை உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஆண்டுக்கு ரூ.113 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 600 செலவு ஏற்படும். இவ்வாறு தரம்  உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள், அலுவலக வசதிகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம், நூலகம், கழிப்பிடம் மற்றும் தளவாடப் பொருட்கள் சார்ந்த செலவினங்களுக்காக தலா ரூ.58.12 லட்சம் வீதம் 710 பள்ளிகளுக்கு ரூ.412 கோடியே 65 லட்சம் ஒப்புதல் அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இதேபோல் 2009ம் ஆண்டில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளுக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 19 லட்சம் கூடுதல் செலவாகும். அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ் தொடக்க கல்வி துறையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பணிபுரிய 1581 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலை பள்ளி, மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆக மொத்தம் 2,863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆண்டுக்கு ரூ.75 கோடியே 40 லட்சம் செலவு ஏற்படும்.  இதேபோல் 6 முதல் 8ம் வகுப்புகளில் பணிபுரிய 3,565 கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.58 கோடியே 82 லட்சம் செலவாகும்.  மேலும் அனைவருக் கும் கல்வி திட்டத்தின் கீழ் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக  2011-12 கல்வியாண்டில் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பணியிடம் வீதம் 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 63 ஆயிரம் செலவு ஏற்படும். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sunday, December 4, 2011

current affairs

 Dec-1         Dec-2        Dec -3       Dec -4       Dec-5

 Dec -6        Dec-7        Dec -8      Dec -9        Dec-10

 Dec-11        Dec-12     Dec -13     Dec -14    Dec-15

 Dec-16       Dec -17      Dec -18     Dec-19    Dec-20

 Dec-21       Dec -22      Dec -23     Dec-24    Dec -25

Dec-26       Dec-27        Dec-28      Dec-29     Dec -30

Dec-31

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிபுதிய மகப்பேறு திட்டம்



டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 6 ஆயிரம் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் இதுவரை வழங்கப்பட்டது.  
இந்த உதவித் தொகையை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி இந்த திட்டத்தை தலைமை செயலகத்தில் ஜெயலலிதா தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கினார்.  
இதைத் தொடர்ந்து இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக ரூ. 313 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1-6-2011-ல் இருந்து அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த திட்டம் பொருந்தும் வகையில் தாய்மார்களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது.  
பிரசவித்த தாய்மார்கள், 7-வது மாதத்தில் உள்ள கர்ப்பிணிகள் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு முடித்தவர்கள் என 3 பிரிவினரையும் தேர்வு செய்து நிதி வழங்குகிறார்கள். இதை செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.

திட்டங்கள்




உலகின் அதிவேக விமானத் திட்டம்

விமானங்களிலேயே மிகவும் வேகமாக பறக்கக்கூடிய ஜெட் விமானத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் தான். அதைவிட வேகமாக மின்னல் வேகத்தில் பறக்கும் விமானத்தை வடிவமைக்கும் பணியில் அமெரிக்க அரசின் பாதுகாப்பு அமைப்பான பெண்டகன் ஈடுபட்டுள்ளது. விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளின் வேகத்தில் செல்லும்படியாக விமானத்தை வடிவமைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த விமானம் வெளிப்புற காற்றை உள்ளிழுத்து இரண் டாயிரம் டிகரி பாரன்ஹ¦ட் அளவிற்கு வெப்பமடைந்து விமான எரிபொருளுடன் இணைந்து புயல் வேகத்தில் பறக்கும் எனத் தெரிகிறது. இதற்கான முதல் கட்ட ஆய்வு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால் உலகின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு ஒருமணி நேரத்தில் பறந்து செல்லலாம். நொடிப் பொழுதில் மற்றொரு நாட்டை தாக்கி அழிக்கலாம். இந்த மின்னல் வேக விமானத்திற்கு ஸ்கிரேம் ஜெட் என பெயரிடப்பட்டுள்ளது.

இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திட்டம்

இயற்கைப் பேரழிவுகள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பதற்கான பல்வேறு தொழில்துறை நிறு வனங்களுடன் ஐ.நா.வின் தொலைத்தொடர்பு அமைப்பு திட்டமிட்டிருக் கிறது. தொலை தூரத்தில் இருக் கும் பிரதேசங்கள், ஏழைநாடுகள் ஆகியவற்றில் இயற்கைச் சீற்றங் கள் குறித்து முன்அறிவிப்பு செய்வதற்கு போதுமான வசதிகள் இல்லை. இதை மேம்படுத்துவதற்காகவே இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், பேரழிவுகள் நடக்கும் இடங்களில் பாதிக்கப்பட்டோரை தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் நாம் காப்பாற்ற முடியும். நிவாரணப் பணிகளை விரைவாகச் செய்வதற்கும் இவை பயன்படும். சர்வதேச தொலைத் தொடர்பு அமைப்பு இதற்கான புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

தாதா சாகேப் பால்கே தேவ் ஆனந்த் திடீர் மரணம் !

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

லண்டன்: இந்தி சினிமாவில் காதல் மன்னன் என பெயர் பெற்ற நடிகர் தேவ் ஆனந்த், இன்று அதிகாலை மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.


இந்தி படங்களில் 1940களில் தொடங்கி 30 வருடம் கொடி கட்டி பறந்தவர் தேவ் ஆனந்த். சமீபத்தில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டு சென்றார். 


அங்குமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று அதிகாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் அடைந்தார். அவரது மகன் சுனில் உடனிருந்தார். 

1946ம் ஆண்டு ‘ஹம் ஏக் ஹெயின்Õ படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். ‘ஜித்திÕ என்ற படம் 1947ம் ஆண்டு ரிலீஸானது. அது சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து முன்னணி நடிகரானார். ‘பேயிங் கெஸ்ட்Õ, ‘பாஸிÕ, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணாÕ, ‘தேஸ் பரதேஸ்Õ உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் நடித்த ‘கைட்Õ என்ற படம் வெளிநாட்டு படங்களுக்கான போட்டி பிரிவில்  ஆஸ்கர் போட்டிக்காக அனுப்பப்பட்டது. 2001ம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 2002ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதும் பெற்றார். பட நிறுவனம் தொடங்கி 35க்கும் அதிகமான படங்களை தயாரித்தார். பல படங¢களை இயக்கியுள்ளார். 

1950களில் ஏராளமான காதல் கதை படங்களில் நடித்து புகழ்பெற்றதால் காதல் மன்னன் என புகழ்பெற்றார். படங்களில் இவரது வித்தியாசமான வசன உச்சரிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து வெள்ளி விழா படங்களை தந்ததால் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

விருதுகள்




கிரீன் ஆஸ்கார்ஸ் விருது

கழிவுப் பொருட்களைக் கொண்டு எரி பொருளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லண்டனில் ஆண்டுதோறும் கிரீன் ஆஸ்கார்ஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விருது கேரளாவைச் சேர்ந்த பையோடெக், கர்நாடகாவைச் சேர்ந்த செல்கேர் மற்றும் எஸ்.கே.ஜி.சங்கர் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்த மூன்று இந்திய நிறுவனங்களுக்கும் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோர் கிரீன் ஆஸ்கார்ஸ் விருதுகளை வழங்கினார்.

ஆஸ்கார் விருதுகள்

திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப் படுவது ஆஸ்கார் விருதாகும். ஆஸ்கார் விருதின் 81-—வது விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கோடாக் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற ஆங்கில படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்டன. இந்த படத்துக்கு சிறப்பாக இசையமைத்த இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசையமைப்பு, சிறந்த பாடல் ஆகிய இரண்டு பிரிவுகளில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஒலி சேர்ப்புக்கான விருது கேரளத்தைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டிக்கும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விருது

மேகாலயத்தில் பெண்கள் மத்தியில் பணிபுரிந்து வரும் சமூக சேவகிகள் இருவருக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் குழந்தைகள் கடத்தலைத் தடுப்பதற்கு முழுமையான ஒருமுறையை உருவாக்கியதற்காக ஹசீனா கர்பி என்பவருக்கும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கும் சகோதரி ஜுடித் ஷதாப் என் பவருக்கும் யுனானிமா என்ற சர்வதேச அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் ஆசியர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம




உலக பணக்காரர்கள் பட்டியல்

உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு ஆலை அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முத லிடத்தில் முகேஷ் அம் பானி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபரு மான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது. மேலும் 1,950 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் ஏழாவது பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார்.

நாட்டில் தனியார் முதலீடு அதிகரிப்பு

நம் நாட்டில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எவேல்யூசெர்வ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியா தனியார் பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு மேற்கொள்ளப்படும் தனிநபர் பங்கு முதலீடுகளின் மதிப்பு சுமார் ரூ.80,000 கோடி என்ற அளவில் இருக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேலை சூழல் பற்றிய சர்வதேச சர்வே

கெல்லி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ஊழியர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஓர் சர்வே நடத்தியது. அதில் பல சுவாரஸ்ய மான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 28 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டாயிரம் இந்திய ஊழியர்கள் உள்பட மொத்தம் எழுபதாயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய ஊழியர்களில் 70% பேர் தாங்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள் ளார்கள். ஊழியர்களின் திருப்தியில் இந்தியா 7_வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் மிக மகிழ்ச்சியான ஊழியர்கள் ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா--துபை இடையே வர்த்தகம் உயர்வு

இந்தியா--துபை இடையிலான வர்த்தகம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.45,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2002_ம் ஆண்டில் இந்தியா-துபை இடையிலான வர்த்தகம் ரூ.12,000 கோடியாக இருந்தது. இது 6 ஆண்டுகளில் 340 சதவிகிதம் உயர்ந்து ரூ.45,000 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் இடையிலான வர்த்தகம், துபை மூலமே நடக்கிறது. வரும் ஆண்டுகளில் இரு நாடுகளிடையேயான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். துபைக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.

அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு

கடந்த ஜனவரி மாதத்தில் நம் நாட்டில் 273 கோடி டாலர் மதிப்பிற்கு அன்னிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நேரடி முதலீட்டை விட (176 கோடி டாலர்) 55 சதவீதம் அதிகமாகும். ஆனால் அதற்கு பிறகு அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு தீவிரமடைந்ததால், நம் நாட்டில் அன்னிய நேரடி முதலீடு குறைந்துபோனது. இந்த நிலையில் சென்ற ஜனவரி மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு அதிகளவில் வந்துள்ளது என்பது அயல்நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

சர்வதேசம்




ரஷ்யா ஏவுகணை சோதனை

தரையிலிருந்து ஏவப்பட்டு தரை இலக் கைத் தாக்கும் பழமையான ஆர்.எஸ்.-18 ரக ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது. 105 டன் எடையும், 80 அடி உயரமும் கொண்ட இந்த ஏவுகணை சுமார் 9 ஆயிரத்து 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கவல்லது. இந்த ரக ஏவு கணைகள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவற்றைத் தொடர்ந்து ராணுவத்தில் பயன்படுத்தலாமா என்பதை முடிவு செய்வதற்காகவே ரஷ்யா இந்தச் சோதனையை நடத்தியது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை கம்சத்கா தீபகற்பத்தில் இருந்த இலக்கை சரியாகத் தாக்கியது. பழமையான ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற சோதனைகளை ரஷ்யா நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் மாயமான தீவுகள்

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு களால் இதுவரை 30 தீவுகள் மறைந்து விட்டன. தீவுகளின் கூட்டம் என்றழைக்கப் படும் இந்தோனேசிய நாட்டில் மொத்தம் 17,504 தீவுகள் இருந்தன. அந்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் இயற்கை சீற்றங்களினால் தற்போது 17,480 தீவுகள் மட்டுமே உள்ளன. இவையனைத்தும் சுனாமி, நிலநடுக்கம், கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்களினால் அழிந்தன. மேலும் தீவுகள் அழிவதைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 2030-—க்குள் 3000 தீவுகள் மறையும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிரகத்தின் சந்திரனுக்கும் வளையங்கள்

சனிக்கிரகத்தைச் சுற்றிலும் வளையங்கள் இருக்கின்றன. அதே போல சந்திரன்களில் ஒன்றான ரியாவுக்கும் அதைச் சுற்றிலும் வளையங்கள் உள்ளன. இதை நாசாவின் காசினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. ரியா சனிக்கிரகத்தின் 2-—வது பெரிய சந்திரன் ஆகும். இதன் விட்டம் 1500 கிலோமீட்டர். நீண்ட காலத்துக்கு முன்பு வால் நட்சத் திரங்கள் மோதிக் கொண்டதால் அதிலிருந்து வெளியான வாயுவும், திடப் பொருள்களும் சேர்ந்து தான் இப்படி வளையங்களாக உருவாகியுள்ளன என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் அமைச்சர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகை யாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமான கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை வெளி யேற்றுவதை ஒவ்வொரு நாடும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மேலும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது பனியாறுகள் சுருங்கி, குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் எனவும் சீனாவில் வெப்பம் மற்றும் வறட்சி அதிகரிக்கும் எனவும், கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளை சூறைக்காற்றுகள் அடிக்கடித் தாக்கும் என வும் மாநாட்டில் அறிக்கை வெளியிடப் பட்டது. இந்த அறிக்கையை ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் அங்கீகரித்துள்ளனர்.

உலகின் மிகச் சிறந்த நகரம்

உலகின் மிகச் சிறந்த நகரமாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் சிறந்த நகரங்களை கண்டறிய மோனோகிள் என்ற பத்திரிகை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் தரமான வாழ்க்கை முறை, மிகப்பெரிய அளவிலான போக்குவரத்து முறை, உணவகங்கள், சுற்றுச் சூழல், நவீன டிசைன் சென்டர்கள் உள்பட பல அம்சங்களில் டென்மார்க் நாட்டின் தலை நகர் கோபன்ஹேகன் உலகிலேயே சிறந்த நகரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய நகரங்களாக கருதப்படும் லண்டன் மற்றும் நியூயார்க், சிறந்த முதல் 20 நகரங்கள் பட்டியலில் கூட இடம் பெறவில்லை .

தேசம





மலேசிய நாட்டில் இந்திய பல்கலைக்கழகம்

இந்திய பல்கலைக்கழகங்களின் கூட் டமைப்பு மலேசியாவில் ஒரு சர்வதேச தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை அமைக்க வுள்ளது. மலேசியாவில் உள்ள மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான பெராக் பகுதியில் இப்பல்கலைக்கழகம் கட்டப்படுகிறது. ஐந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து ஒருங் கிணைந்த பல்கலைக்கழகத்தை இங்கு உரு வாக்குகின்றன. சென்னை பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஹைதராபாத், சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக் கழகம், பெல்காமில் உள்ள கோல்டு பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இந்த பல் கலையை உருவாக்குகின்றன. சுமார் ரூ.540 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள இந்தப் பல்கலையின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும். மேலும் இதன் மூலம் இரு நாடுகளும் கூட்டாக கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடு படவும் தவிர மருத்துத் துறையில் இருநாட்டு மாணவர்களும் பயனடையும் வகையில் பயிற்சிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- _ பிலிப்பைன்ஸ் இடையே உடன்பாடு

இந்தியா-பிலிப்பைன்ஸ் இடையே பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதற்காக கூட்டு ஆணையம் ஒன்றை அமைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. ஆண்டுக்கு இருமுறை கூடும் இந்த ஆணையம், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தும். இதில் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பார்கள். மேலும் இருநாடுகளுக்கும் இடையே ஏற்றமதி, இறக்குமதியாகும பொருள்களின் பட்டியலை இறுதி செய்யும் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று இந்திய வர்த்தக கழகம் மற்றும் பிலிப்பைன்ஸ் சர்வதேச வர்த்தக கழகம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது. ஆய்வு, வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் மாற்று எரிசக்தி ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்தவும் இருதரப்பும் சம்மதித்தன. இது தவிர, சுகாதாரம் மற்றும் மருந்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே ஒப்பந்தம்

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே வேளாண் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. வேளாண் துறையில் இந்த இருநாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் படி வேளாண் விரிவாக்கம், நிலம், நீர் ஆகியவற்றில் மேலாண்மை மற்றும் பாது காப்பு, வேளாண் பொருள் வர்த்தகத்தை ஊக்குவித்தல், வேளாண் துறையில் முதலீடு, கால்நடைகள் பராமரிப்பு, மீன் வளம் உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

தமிழகம்



தமிழகம்

தண்ணீரால் ஓடும் கார் கண்டுபிடிப்பு

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக வேறு தொழில்நுட்பத்தில் இயங்கும் காரை கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) வேதியியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் பி.விஸ்வநாதனின் திட்ட வடிவில், தண்ணீரால் ஓடும் காரை ஆர்.எம்.என். தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஓராண்டு தீவிர முயற்சிக்குப் பின் இந்தக் கண்டுபிடிப்பு சாத்தியமாகி உள்ளது. வெறும் தண்ணீரை மட்டும் கொண்டு காரை இயக்க முடியாது. தண்ணீருடன் சில வேதிப்பொருள்களை சேர்ப்பதின் மூலம் ஹைட்ரஜன் கிடைக்கிறது. இந்த ஹைட்ரஜன் மூலம் காரை இயக்குவது சாத்தியமாகி உள்ளது. இது சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காது.

இந்தியாவுக்கு அதிநவீன ராணுவ தாளவடங்கள்

இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது இஸ்ரேல். அண்மைக்காலமாக இருநாடுகளுக் கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. அத்தோடு இஸ்ரேல் தளவாடங்களை யும், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிடு வதில் இஸ்ரேலின் அனுபவத்தையும் பெற இந்தியா விரும்புகிறது. மேலும் புதிதாக ஏற்பட் டுள்ள உடன்பாட்டின்படி கடலோரப் பாது காப்பை வலுப்படுத்தவும் எதிரிகளின் விமானங் களை முன்கூட்டியே கண்டுபிடித்து தடுத்து அழிக்கும் ரேடார்களை இஸ்ரேல் இந்தியாவுக்கு வழங்க உள்ளது. மும்பைத் தாக்குதலை அடுத்து கடல் வழி மற்றும் வான்வழித் தாக்குதலைத் தடுக்க ரேடார் அமைப்புகளை வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கு இஸ்ரே லின் ‘ஏரோஸ்டாட்’ ரேடார்களை இந்தியா வாங்க உள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஷெட்

சென்னை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2009-—10---ம் நிதி யாண்டில் ரூ.1,614 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் புதிய வரிகள் இல்லை. பற்றாக்குறை ரூ.1.14 கோடியாகும். இந்த நிதியாண்டில் மொத்த வரவு ரூ.1613.24 கோடி, மொத்த செலவு ரூ.1614.38 கோடி, பற்றாக்குறை ரூ.1.14 கோடி ஆகும்.

மூன்று புதிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

இஸ்ரோ விஞ்ஞானிகள் பூமிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மூன்று புதிய வகை பாக்டீரியாக்களை பூமியின் மேல் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோ கடந்த 2005--ல் 459 எடை கொண்ட பலூன் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக பூமிக்கு மேல் 20 முதல் 41 கிமீ., வரையிலான தூரத்தில் நிறுத்தியது. பின்னர் அந்த பலூன் பாராசூட் மூலம் பூமிக்கு வந்தது. அதில் ஒட்டியிருந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய செல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மாலிகுலர் அறிவியல் மையத்தில் வைத்து ஆராயப்பட்டது. இந்த ஆராய்ச்சின் முடிவில் இதுவரை பூமியில் அறியப்படாத மூன்று பாக்டீரியாக்கள் விண் வெளியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. பூமிக்கு மேல் 40 கிமீ., தூரத்தில் புற ஊதா கதிர்களிலில் இருந்து தப்பி உயிர் வாழ்வது என்பது எந்த உயிரினத்துக்கும் இய லாத காரியம் என்பதால் இந்த பாக்டீரியக்கள் விண்வெளியின் வேறு பகுதியிலிருந்து வந்திருக் கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மூன்று பாக்டீரியாக்களில் ஒன்றுக்கு பாசில்லஸ் இஸ்ரோனேன்சிஸ் என இஸ்ரோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றொன்றுக்கு பாசில்லஸ் ஆர்யபட்டா என இந்திய வானசாஸ்திர முன்னோடி ஆர்யபட்டாவின் பெயர் கொடுக்கப்பட்டுள் ளது. மூன்றாவது பாக்டீரியாவுக்கு ஜேனிபாக் டர் ஹோய்லை என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாக்டீரியாக்கள் முன்பு பூமியில் உள்ள எரிமலை பகுதிகளில் வசித்திருக் கலாம். அவை எரிமலை வெடிப்பின்போது துகள் களுடன் சேர்ந்து விண்ணில் பறந்திருக்கலாம். பின்னர் அது அங்குள்ள சூழலுக்கு வாழ பழகி கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Saturday, December 3, 2011

அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் அக்னி ஏவுகணை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பாலாசூர் : அணுகுண்டுகளை தாங்கி சென்று எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அக்னி 1 ஏவுகணை இன்று ஒடிஷா கடற்கரையில் மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்டு தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் அக்னி வரிசை ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி சோதனை செய்து வருகிறது. அக்னிகள் ஏவுகணை பல முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அதன் தயார் நிலை குறித்து அவ்வப்போது ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் டிஆர்டிஒ விஞ்ஞானிகள் முன்னிலையில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் அணுகுண்டுகளை தாங்கி செல்லும் சக்தி படைத்த அக்னி 1 ஏவுகணை இன்று ஒடிஷா கடற்பகுதியில் உள்ள வீலர் தீவில் உள்ள ஏவுகணை பரிசோதனை மையத்தில் மீண்டும் சோதித்து  பார்க்கப்பட்டது. சோதனை வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி மரணம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுடெல்லி :  அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி (70) இன்று காலையில் மரணமடைந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அவரது உடல் நிலை மோசமானது. இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இந்திரா கோஸ்வாமி, கடந்த 2000ம் ஆண்டு இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞான பீட விருது பெற்றவர். அவர் எழுதிய புத்தகங்கள், நாவல்கள் பல்வேறு விருதுகளை வென்றுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக அசாமை உலுக்கி வரும் உல்பா தீவிரவாத பிரச்னையை தீர்க்க அமைதி பேச்சுவார்த்தைக்கு இவர் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கது.