Saturday, November 26, 2011

எகிப்தின் புதிய பிரதமர்


கமால் அல்-கன்சூரி

First Published : 26 Nov 2011 03:59:29 AM IST

 எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் ராணுவ ஆட்சியாளர்களைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான 
கெய்ரோ, நவ.25: எகிப்து பிரதமராக கமால் அல்-கன்சூரி நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
 எகிப்து நாட்டை ஆண்டு வரும் ராணுவக் கவுன்சில் அவரை நியமித்துள்ளதாகவும், இடைக்கால அரசின் பிரதமர் யெசாம் ஷரஃப் அமைச்சரவையின் ராஜிநாமாவை கவுன்சில் ஏற்றுக் கொண்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கன்சூரி 1996-ம் ஆண்டு முதல் 1999 வரை பிரதமராகப் பதவியிலிருந்தவர். ஹோஸ்னி முபாரக்கின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த கன்சூரி, அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டபோது, முபாரக்கிடமிருந்து விலகினார். தனது பதவிகாலத்தின்போது சர்வதேச செலாவணி நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளுடனான எகிப்தின் உறவை கன்சூரி மேம்படுத்தினார்.
 வன்முறைக்கு 41 பேர் சாவு: எகிப்தில் ராணுவக் கவுன்சிலுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை முதல் போராட்டம் நடந்து வருகிறது. பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த வன்முறைகளில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த வன்முறையில் மட்டும் 36 பேர் உயிரிழந்தனர்.
 உடனடியாக நிரந்தர அரசை ஏற்படுத்தக் கோரியும், ராணுவக் கவுன்சிலின் அதிகாரங்களை குடிமக்கள் அரசிடம் ஒப்படைக்கக் கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Friday, November 25, 2011

தனியார் பள்ளிகளில் 25 % இட ஒதுகிடு



HÛZ UÖQYŸL¸Á L¥«oÙNXÛY AWr H¼h•
AWNÖÛQ ÙY¸œ|

ÙNÁÛ], SY.24-

6 ˜R¥ 14 YV‰ E·[ AÛ]†‰ hZ‹ÛRLºeh• CXYN, LyPÖV L¥« YZjh• YÛL›¥ U†‡V AWr L¥«oNyP• ÙLց| Y‹‰·[‰. A‹R NyP†ÛR AU¥T|†‰• YÛL›¥ R–ZL AWr LP‹R YÖW• «‡˜Û\LÛ[ A½«†R‰. RÂVÖŸ T·¸L¸¥ HÛZ UÖQYŸLºeh 25 NR®R CPJ‰eg| YZjLT|• GÁ¿• AR¼LÖ] L¥«o ÙNXÛY AWÚN H¼¿e ÙLÖ·º• GÁ¿ A½«eLTy| C£‹R‰.

ARÁTz, RÂVÖŸ rVŒ‡ T·¸L¸¥ Tzeh• HÛZ UÖQYŸL· (h|•T ஆண்டு  Y£UÖ]• ¤.2 XyN†‡¼h·), S¦‹R ‘¡«]Ÿ (RÖ²†RTyÚPÖŸ, TZjhz›]Ÿ), ÛL«PTyÚPÖŸ (A]ÖÛRL·, GšyÍ ÚSÖVÖ¥ TÖ‡eLTyÚPÖŸ, AWYÖ‚L·, ‰“W° ÙRÖ³XÖ[ŸL¸Á hZ‹ÛRL·) BfÚVÖ¡Á Tz“ ÙNXÛY AWr H¼¿eÙLÖ·º•. C‹R ŒÛX›¥, CR¼LÖ] AWNÖÛQ ‘\‘eLTy| E·[‰.

25 NR®R J‰egyzÁg² RÂVÖŸ T·¸L¸¥ ÚNŸeLT|• UÖQY-UÖQ«Lºeh q£ÛP, “†RLjL·, N†‰Q° BfVÛY AWr U¼¿• ER« ÙT¿• T·¸L¸¥ Tzeh• UÖQYŸLÛ[ ÚTÖ¥ CXYNUÖL YZjLT|•. C‰ÙRÖPŸTÖL RÂVÖŸ T·¸ ŒŸYÖL†‡]£PÁ AWr A‡LÖ¡L· BÚXÖNÛ] SP†‡ Y£f\ÖŸL·.

இந்தியாசில்லறை வணிகத்தில் 51% நேரடி அன்னிய முதலீடு

புது தில்லி, நவ. 24: சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
 மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இதில், மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு திரிணமூல் காங்கிரûஸ சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி எதிர்ப்பு தெரிவித்தார்.
 கூட்டணி கட்சியின் எதிர்ப்பையும் மீறி சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
 இதன் காரணமாக ரூ.29.50 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய சில்லறை விற்பனைச் சந்தையில் வால்மார்ட், ஓமன்மெகா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் விரைவில் கடை விரிக்கும். பத்து லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் சுமார் 53 நகரங்களில் அந் நிறுவனங்களின் பல்பொருள் அங்காடி அமைக்கப்படும் என்றும் தெரிகிறது.
 இடவசதியை கருத்திற்கொண்டு நகரில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவு வரை அங்காடியை அமைத்துக் கொள்ள எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 மேலும் ஒரு பொருள் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 பா.ஜ.க., இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வியாபாரிகள் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 2,500 மாதிரி பள்ளிகள்: அமைச்சரவைக் கூட்டத்தில், தனியார்- அரசு பங்களிப்பில் 2,500 மாதிரி பள்ளிகளை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும்.
 தனியார் நிறுவனங்கள் நிலங்களை வாங்கி பள்ளிக்கான கட்டடங்களை கட்ட வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு மாதிரி பள்ளியிலும் 2,000 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதில் மத்திய அரசு சார்பில் 980 மாணவர்களும், மீதமுள்ள இடங்கள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சார்பிலும் நிரப்பப்படும்.

சென்னை ஐகோர்ட்டுக்கு வயது 150 !

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை : இந்தியாவின் முதல் சுப்ரீம் கோர்ட் சென்னையில்தான் முதன்முதலில் அமைக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தற்போதுள்ள சென்னை ஐகோர்ட்தான் சுப்ரீம் கோர்ட்டாக செயல்பட்டு வந்தது. அதற்கு வானளாவிய அதிகாரமும் இருந்தது.  சென்னை ஐகோர்ட் உருவானதில் பல சுவையான தகவல்கள் உள்ளன. சென்னையில் கி.பி. 1600 முதல் 1800 வரை பல்வேறு பெயர்களில் கோர்ட்கள் செயல்பட்டு வந்தன. இங்கிலாந்து அரசர் 1-ம் ஜேம்ஸ், புதிய கோர்ட் அமைப்பதற்கான உத்தரவை 1609 மே 31-ம் தேதி அறிவித்தார்.  ‘ராயல் சார்ட்டர்’ என்ற பெயரில் செயல்பட்ட இந்த கோர்ட், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியினரால் நடத்தப்பட்டது. குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு இருந்தது. பின்னர் கடற்கரை பகுதியில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கிழக்கிந்திய கம்பெனியினர் உருவாக்கினர். அப்போது, ‘சத்திரம்’ என்ற பெயரில்தான் கோர்ட் இயங்கியது. இதில் சிறிய குற்றங்களுக்கான வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்தன. 
சென்னை மாகாண கவர்னர் சத்திரம் அல்லது டவுன் ஹாலில்தான் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. வழக்குகளை விசாரிப்பவர் ‘கண்ணப்பர்’ என்று அழைக்கப்பட்டார். பிரச்னைக்குரிய, குழப்பமான வழக்குகளை, குறிப்பாக ஆங்கில மொழியில் உள்ள வழக்குகளை கண்ணப்பர் விசாரிக்க மாட்டார். அந்த வழக்குகள் இங்கிலாந்தில் உள்ள கோர்ட்களுக்கு மாற்றப்பட்டன.
1802-ல் ஜில்லா கோர்ட்கள் (மாவட்ட கோர்ட்) அமைக்கப்பட்டன. இதில் மாவட்ட அளவிலான சிவில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. ஜில்லா கோர்ட்களின் தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக 1842-ல் புரவின்ஷியல் (மாநில அளவிலான) கோர்ட்கள் அமைக்கப்பட்டன. 1843-ல் தலைமை குற்றவியல் கோர்ட் உருவாக்கப்பட்டது. 1861-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் சட்டப்படி, வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம், அந்நாட்டு அரசரின் நேரடி ஏஜென்டான கவர்னருக்கு வழங்கப்பட்டது. அதன்படி, எல்லா வழக்குகளும் சென்னையிலேயே விசாரிக்கப்பட்டன.

அதே 1861-ல் இந்தியாவில் ஐகோர்ட்களை அமைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி கொல்கல்தா, சென்னை, மும்பை ஆகிய 3 இடங்களில் ஐகோர்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் செயல்பட்டு வந்த சுப்ரீம் கோர்ட்டை ரத்து செய்யும் உத்தரவை இங்கிலாந்து அரசு வெளியிட்டது. சென்னை ஐகோர்ட்டை உருவாக்குவதற்கான அறிவிப்பாணையை 1862 ஜூன் 26-ல் விக்டோரியா மகாராணி பிறப்பித்தார். இரண்டு மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை ஐகோர்ட் அமைப்பதற்கான உத்தரவு செயல்படுத்தப்பட்டது. இடவசதி இல்லாததால் பீச் ரயில் நிலையம் அருகில் உள்ள கஸ்டம்ஸ் ஹவுஸ் கட்டிடத்தில்தான் சுப்ரீம் கோர்ட் இயங்கிவந்தது. ஐகோர்ட் அறிவிப்புக்கு பின்னர் சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு கோர்ட் மாற்றப்பட்டது. 1892 வரை கலெக்டர் அலுவலக கட்டிடத்திலேயே ஐகோர்ட் இயங்கி வந்தது. இதற்கிடையே, 1888-ல் தற்போதுள்ள ஐகோர்ட் வளாகத்தில் ஐகோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. 4 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த பணி முடிவடைந்த நிலையில், 1892 ஜூலை 12-ம் தேதி புதிய கட்டிடத்துக்கு ஐகோர்ட் மாற்றப்பட்டது.

ஐகோர்ட்டின் முதல் தலைமை நீதிபதியாக ராஜமன்னார் பொறுப்பேற்றார். பல வரலாற்று சிறப்பு மிக்க வழக்குகளை சென்னை ஐகோர்ட் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, அண்ணாவின் ஒரே நாடு பத்திரிகை வழக்கு, விஷ ஊசி வழக்கு போன்ற முக்கிய வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டன. வரலாற்று சிறப்புமிக்க சென்னை ஐகோர்ட் தொடங்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் 149 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. 150 ஆண்டில் ஐகோர்ட் தனது பணியை தொடங்கியுள்ளது. இதையடுத்து, 150-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் விழா நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஐகோர்ட்டும் வக்கீல்கள் சங்கங்களும் செய்து வருகின்றன. விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், சதாசிவம், ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், தமிழக அமைச்சர் பரஞ்சோதி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்கின்றனர்.   

விழா குறித்து வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்களுக்கும் முன்னோடியாக சென்னை ஐகோர்ட் செயல்பட்டு வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. நாட்டின் முதல் சுப்ரீம் கோர்ட் என்ற பெருமையை பெற்றுள்ள ஐகோர்ட்டின் 150-வது கொண்டாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்’’ என்றார். பெண் வக்கீல்கள் சங்க தலைவர் பிரசன்னா கூறும்போது, ‘‘பாரம்பரியம்மிக்க ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு விழாவை தமிழக வக்கீல்கள் கொண்டாடி வருகிறோம். இதையொட்டி ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பெண் வக்கீல்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சென்னை ஐகோர்ட் தமிழகத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சிறப்பு சேர்த்துள்ளது’’ என்றார்

Friday, November 18, 2011

5 நோய்க்கு ஒரே தடுப்பூசி அடுத்த மாதம் தொடக்கம்!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தமிழகம், கேரளாவில் 5 நோய்களுக்கு ஒரே தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் பி.கே.பிரதான் கூறியதாவது: ஜெனீவாவை சேர்ந்த தடுப்பூசிகளுக்கான உலக கூட்டமைப்பு (காவி), 5 நோய்களை தடுக்கும் ஒரே தடுப்பூசியை இந்தியாவுக்கு இலவசமாக வழங்குகிறது. ரூ.765 கோடி மதிப்புள்ள தடுப்பூசியை 3 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. இவை 10 மாநிலங்களில் பயன்படுத்தப்படும். அடுத்த மாதம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. முதல்கட்டமாக தடுப்பூசி போடுதலில் சிறப்பாக செயல்படும் தமிழகம் மற்றும் கேரளாவில் திட்டம் தொடங்கப்படுகிறது. 

இரு மாநிலங்களிலும் முதல் ஆண்டில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 10 டோசாக அளிக்கப்படும். முதல் ஆண்டில் 50 லட்சம் டோஸ் தேவை. குஜராத், கர்நாடகா, அரியானா, கோவா, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த மாநிலங்களில் தடுப்பூசியை கையாளும் திறனை ஆய்வு செய்த பின்னர், அவர்கள் கோரிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். 
இவ்வாறு பிரதான் கூறினார்.

ஐந்து நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை அறிமுகப்படுத்த, கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப பரிந்துரை குழு சிபாரிசு செய்தது. டிப்தீரியா, பெர்டூசிஸ், டெட்டனஸ், மஞ்சள் காமாலை, மூளை காய்ச்சல் ஆகிய நோய் தடுப்பாற்றலை இந்த தடுப்பூசி அளிக்கும்.

ஷாங்காய் கூட்டமைப்பில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மாஸ்கோ: ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க ஆதரவளிப்போம் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ரஷ்யா வந்துள்ளார். மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ - கிருஷ்ணா இருவரும் சந்தித்து, பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு, ஈரான் அணுஉலை பிரச்னைகள், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் செர்ஜி கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் தற்போது இந்தியா பார்வையாளர் அந்தஸ்தில் மட்டுமே உள்ளது. இந்த கூட்டமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க ரஷ்யா ஆதரவளிக்கும் என்றார். ஷாங்காய் கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

இந்தியா, பாகிஸ்தான், மங்கோலியா, ஈரான் ஆகிய நாடுகள் பார்வையாளர் என்ற அந்தஸ்தில் உள்ளன. இந்நிலையில் ஷாங்காய் கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவும் பாகிஸ்தானும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணா கூறுகையில், ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை உருவாக்க இந்தியாவும் ரஷ்யாவும் தேவையான உதவிகளை செய்யும் என்றார்.

பிரபலமானவர்கள்




உசைன் போல்ட்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ரீபாக் கிராண்ட் ப்ரீ தடகளப் போட்டியில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் தூர ஒட்டப் பந்தயத்தில் பந்தய தூரத்தை 9.72 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 2007_ல் இத்தாலியின் ரீட்டி நகரில் நடந்த தடகள போட்டியில் ஜமைக்கா வீரர் அசபா பாவெல் 9.74 வினாடி களில் 100 மீட்டர் தூரத்தை கடந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

சில்வியோ பெர்லுஸ்கோனி

இத்தாலி நாட்டின் மிகப் பெரிய தொழில் அதிபராக விளங்கி வருபவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் ஏற்கனவே இரண்டு முறை அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தவர். தற்போது நடந்த பார்லிமெண்ட் தேர்தலிலும், அவரது கட்சியே வெற்றி பெற் றது. இதையடுத்து மூன்றாவது முறையாக இத்தாலி நாட்டின் பிரதமராக சில்வியோ பெர் லுஸ்கோனி பதவியேற்றார்.

பி.வி. நாயக்

இந்திய விமானப் படையின் புதிய தலைவராக ஏர் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் தற்போது இந்திய விமானப் படையின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். விமானப் படையின் தற்போதைய தலைவர் ஃபாலி ஹோமி மேஜர், வரும் மே மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதைத் தொடர்ந்து பி.வி.நாயக் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். 

பாலூட்டும் பெண்களுக்கு, ரூ.1000 வழங்கும் திட்டம் நாடு முழுதும் விரிவாக்கம்!

 பாலூட்டும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் விரிவுப்படுத்தி உள்ளது. இது பற்றி மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவில் மாற்றங்கள் செய்வதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் உயர்குழு அமைக்கப்பட்டு இருந்தது. கிராமப்புற மக்கள் 75% பேருக்கும், நகர்ப்புற மக்கள் 50 சதவீதம் பேருக்கும் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க இந்த குழு கடந்த ஜூலையில் ஒப்புதல் வழங்கியது. 

இந்த நிலையில், இந்த நகல் மசோதாவில் மாற்றங்கள் செய்வது பற்றி மாநில அரசுகள் மற்றும் பல்வே று அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், மானிய விலையில் மக்களுக்கு உணவு தானியங்களை 3 கிலோவுக்கு அதிகமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த சலுகையை பாலூட்டும் தாய்மார்கள், ஆதரவற்றவர்கள், 
முதியோர்களுக்கு கிடைக்கவும்,

குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது 52 மாவட்டங்களில் மட்டும் அமலில் உள்ளது. இது நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது.  இவ்வாறு கே.வி.தாமஸ் கூறினார்.

இந்தியா - ஆசியன் மாநாடு

 : இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 4 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று புறப்பட்டு சென்றார். இந்தியா & ஆசியன் மாநாடு மற்றும் கிழக்கு ஆசியா உச்சி மாநாடு இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இந்தோனேசியா புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது, 

கிழக்கு ஆசிய நாடுகளிடையே உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து புறப்படும் முன்பாக பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட றிக்கையில், ‘ஆசியா நாடுகள் உடனான இந்தியாவின் வர்த்தக, தொழில் உறவுகள் மேலும் பலப்பட இந்திய & ஆசியன் உச்சி மாநாடு உதவும்’ என்று தெரிவித்துள்ளார். 
இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவு பற்றி மன்மோகன் பேச்சு நடத்துகிறார்.

 மாநாட்டை முடித்து கொண்டு இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு மன்மோகன் சிங் செல்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர் லீ சின் லூங்கை சந்தித்து பேசுகிறார். பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, கலசார ரீதியான உறவுகளை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கின்றனர். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு 21ம் தேதி மன்மோகன் நாடு திரும்புகிறார்.

Tuesday, November 15, 2011

இத்தாலி பிரதமர் ராஜினாமா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ரோம்: இத்தாலியில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். பிரதமர் சில்வியோ ஆட்சியில் ஊழல் பெருகி விட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அரசுக்கு கடன் அதிகரித்துள்ளதால் நிலைமை மோசமானது. இதையடுத்து பொருளாதார சீர்திருத்தங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி வந்தது. பிரதமர் சில்வியோ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் மக்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக சில்வியோ அறிவித்தார். அதிபர் ஜியார்ஜியோ நேபோலி டானோவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு காரில் சில்வியோ வெளியேறினார். அப்போது அதிபர் மாளிகைக்கு வெளியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாட்டு பாடியும் நடனமாடியும் உற்சாகமாக இருந்தனர். சில்வியோ காரில் வெளியில் வந்ததும் அவருக்கு எதிராக Ôபபூன் பபூன்Õ என்று கோஷம் போட்டனர்.
 அவருக்கு பதில் புதிய அரசுக்கு முன்னாள் ஐரோப்பிய கமிஷனர் மரியோ மோன்டி பிரதமராக இன்று தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

ஆசிய - பசிபிக் மாநாடு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஆசிய - பசிபிக் மாநாடு : ஒபாமா தொடங்கினார்!


ஹொனோலு: ஆசிய - பசிபிக் நாடுகளின் மாநாட்டை ஹவாய் தீவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று தொடங்கி வைத்தார். இதில் 21 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த 1993ம் ஆண்டு ஆசிய - பசிபிக் நாடுகள் மாநாட்டை அமெரிக்கா நடத்தியது. அதன்பின் இப்போதுதான் இந்த மாநாட்டை ஹவாய் தீவில் நடத்துகிறது. மாநாட்டை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொடங்கி வைத்தார். இதில் ஆசிய - பசிபிக் பகுதிகளை சேர்ந்த 21 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து ஒபாமா பேசுகையில், ÔÔஆசிய-பசிபிக் பகுதிகளில் வாழும் மக்கள், பொருளாதார வளர்ச்சிக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இந்த மாநாடு மூலம் நமக்கு கிடைத்துள்ளது. வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாடு குறித்து இந்த மாநாட்டின் முடிவில் பயனுள்ள முடிவுகளை எடுக்க வேண்டும்ÕÕ என்று கூறினார்.

3,000 கிமீ பாய்ந்து தாக்கும் அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பாலாசூர்: அணு ஆயுதங்களை தாங்கி, 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி 2 ஏவுகணைகளின் துல்லிய தன்மை மற்றும் தாக்கும் தூரத்தை மேம்படுத்தி அக்னி 2 பிரைம் ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது. அக்னி 2 ஏவுகணை, 2,000 கிமீ தூரம் சென்று இலக்கை தாக்கும். அக்னி-3, 3500 கிமீ சென்று தாக்கும். இரண்டுக்கும் இடைப்பட்டு 3000 கிமீ தூரம் தாக்கி அழிக்கும் வகையில் அக்னி 2 பிரைம் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. 
இது 20 மீட்டர் நீளம், 17 டன் எடை கொண்டது. ஒடிஷா மாநிலம் வீலர் தீவில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில், இன்று காலை 9 மணிக்கு அக்னி 2 பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கியதாக ராணுவ அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அக்னி 2 பிரைம் சோதனை தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேசம்




               
1/2011              2/2011            3/2011        4/2011          5/2011

6/2011            7/2011            8/2011        9/2011          10/2011

11/2011        12/2011

தேசம்



                 
1/2011              2/2011            3/2011        4/2011          5/2011

6/2011            7/2011            8/2011        9/2011          10/2011

11/2011        12/2011

தமிழ்நாடு


                   
1/2011              2/2011            3/2011        4/2011          5/2011

6/2011            7/2011            8/2011        9/2011          10/2011

11/2011        12/2011


சர்வதேசம்




நேபாளத்தில் பறவை காய்ச்சல்

ஐ5ச1 ரக பறவை காய்ச்சல் கிருமி நேபாளத்தில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. நேபாள அரசு, கிழக்கு பகுதியிலுள்ள ஜாபா மாவட்டத்தை, பறவை காய்ச்சல் பாதித்த அவசர நிலைமை பிரதேசமாக அறிவித்தது. இதுவரை, பறவை காய்ச்சல் தொற்று கொண்ட மக்கள் கண்டறியப் படவில்லை. ஆனால் இப்பிரதேசத்திலுள்ள மக்களின் உடல் நிலைமையை கண்காணிக்கும். இப்பறவை காய்ச்சல் கிருமிகளை நீக்க, சில காலம் பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்தது.

இஸ்ரேல் - ஹாமாஸ் போர்நிறுத்தம் 

இஸ்ரேல் காசா பகுதியில் குண்டுகளை வீசியதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு ஏராளமானவர்கள் படுகாயமடைந் தனர். உலக நாடுகள் இஸ்ரேலை கண்டித்து போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தி வந்தன. அதைனை ஏற்று போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை முற்றிலும் நிறுத்தியதையடுத்து தாங்களும் போர்நிறுத்தம் செய்வதாக ஹமாஸ் இயக்கமும் அறிவித்தது.

இலங்கை அரசுக்கு ஐ.நா.சபை கண்டிப்பு

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அப் பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டித்துள்ளது. இது குறித்து ஐ.நா. அகதிகள் அமைப்புக்கான ஆணையர் ரோன் ரெட்மாண்ட் கூறியதாவது: “”இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து வரும் சண்டையில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ஏராளமான பொது மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்தோ, அல்லது காணாமல் போயுள்ளனர். இது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். போரில் ஏதுமறியாதவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும். போர் காரணமாக வெளியேறிய சுமார் இரண்டு லட்சம் மக்கள், மீண்டும் திரிகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் குடியேறத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய வசதிகள், போதிய பாதுகாப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அகதிகளில் 1,500 பேர், 2008 ஆண்டில் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.இத்தகைய சாதகமான போக்கு இவ்வாண்டும் தொடர வேண்டும்’’ என்று ஐ.நா. ஆணையர் ரோன் ரெட்மாண்ட் தெரிவித் துள்ளார்.

வங்கதேசத்தில் புதிய அரசு 

வங்கதேச நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில், ú‘க் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதையடுத்து ú‘க் ஹசீனா தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுக் கொண்டது. தலைநகர் டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த கோலாகலமான விழாவில், வங்கதேச பிரதமராக ú‘க் ஹசீனா பதவி ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து 31 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டது.

அமெரிக்கா-இந்தியா இடையே ஒப்பந்தம்

கடலோரக் காவலை வலுப்படுத்த 8 விமானங் களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கடல் மார்க்கமாக இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பது தெரியவந்ததால் கடலோரக் காவலை மேலும் வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு கடற்படைக்கு உதவியாக 8 விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. பி-81 ரக விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்குவதென முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க நிறுவனத் துடன் மிகப்பெரிய தொகைக்கு விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். புதிதாக வாங்கப்படும் விமா னங்களில் கப்பலைத் துளைக்கும் டார்பிடோ குண்டுகள், கப்பல் ஏவுகணைகளை முறியடிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களும் இருக்கும். இது தவிர நீர்மூழ்கியை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகம்




இணையத் தளம் மூலம் மின் கட்டணம்

சென்னையில் இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி வங்கிகள் உதவியுடன் அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. அதன்படி, ஆன்- லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதி ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி உதவியுடன் சென்னையில் எந்த நேரமும் பணம் கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. மேலும் இந்த சேவையில் ஐசிஐசிஐ, இந்தியன் வங்கிகளும் பங்கு கொண்டுள்ளது. தற்போது கும்மிடிப் பூண்டி முதல் மரக்காணம் வரை பயனடையும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் 

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி 

சென்னை அருகே உள்ள நெமிலியில் அமைக்கப்பட வுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது ரூ.908 கோடி மதிப்பிலானதாகும். அதோடு, இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.871.24 கோடி நிதியளிக்கவுள்ளது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கத் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம், கூடுதலாக 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.இந்த திட்டம் இன்னும் இரு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சந்திரயான் திட்ட இயக்குநருக்கு டாக்டர் பட்டம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 151-வது பட்டமளிப்பு விழாவில் சந்திரயான் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

திருமங்கலம் இடைத்தேர்தல்

திருமங்கலம் தொகுதி மதிமுக எம்எல்ஏ வீர. இளவரசன் மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம் உள்பட 26 போர் போட்டியிட்டனர். தமிழக தேர்தல் வரலாற்றில் சாதனையாக 88.78 சதவீத வாக்குகள் பதிவாகின. மதுரை மருத்துவக் கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் லதா அதியமான் 39,266 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை வெற்றிக் கண்டார். மேலும் இத்தொகுதியில் 1991-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் சாமிநாதனை 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதே இத்தொகுதியில் சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-மலேசியா இடையே ஒப்பந்தம்

இந்தியாவும், மலேசியாவும் தொழிலாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் தொழிலாளர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு அளிக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் சட்ட ரீதியாக தங்கியிருக்கவும் வழி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் வெளி நாடு வாழ் இந்தியர்கள் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் வயலார் ரவி மற்றும் மலேசியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட னர். இந்த ஒப்பந்தத்தில் எந்தெந்த விதிகளைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இந்த மாதம் இறுதி செய்யப்படும். இந்த ஒப்பந்தம் வர லாற்றில் ஒரு மைல்கல் என்று இருநாடுகளும் தெரிவித்துள்ளன.

தேசம்





இந்தியா-இந்தோனேசியா இடையே உடன்பாடு

இந்தோனேசியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அந்நாட்டு அதிபர் சுசிலோ பாம்பங் யுதொயோனோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தோனேசியாவுடன் பல்வேறு துறைகளில் உறவை மேம்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மேலும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும், இந்தோனேசியாவும் பல்வேறு துறைகளில் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும். 2010-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே 10 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் அதிகரிக்கும். அறிவி யல், தொழில்நுட்பம், கலாச்சாரம் உள்ளிட்ட வி‘யங்களையும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். வேளாண்மை, விளையாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பது தொடர்பாக இருநாடு களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது இந்த ஒப்பந்தத்தில் பல புதிய வி‘யங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வேளாண்மைத்துறை ஆராய்ச்சி, தோட்டக்கலை துறை, வேளாண் பொருள் விற்பனை, நிலம், நீர் மேலாண்மை, உயிரித் தொழில்நுட்பம் போன்ற வி‘யங்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதற்கு முன் இது தொடர்பான ஒப்பந்தம் 1992-ம் ஆண்டில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-ரஷ்யா இடையே 10 ஒப்பந்தங்கள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் மெட்வடெவ் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளிடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இருநாடுகளும் செய்து கொண்ட 10 ஒப்பந்தங்களில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதலாக 4 அணுஉலை களை ரஷ்யா கட்டித் தருவது, மற்ற அணுமின் நிலையங்களுக்கு தேவையான உதவிகளை செய்வது, 80 எம்.ஐ-17 ஹெலிகாப்டர்கள் வழங்குவது, விண் வெளி ஆராய்ச்சிக்கு உதவி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு உதவி, சுற்றுலா மற்றும் கலாசார வளர்ச்சிக்கு உதவுவது, சுங்க இலாகா, வர்த்தகம் உள்ளிட்டவை அடங்கும். மேலும் 2010-ம் ஆண்டுவாக்கில் இருநாடுகளும் வர்த்தக உறவை 10 பில்லியன் டாலருக்கு உயர்த்த முடிவு செய்துள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக் கவும் இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. மொத் தத்தில் இருநாடுகளும் செய்து கொண்ட இந்த ஒப்பந்தங்கள் மூலம் இருநாடுகளின் உறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா-கஜகஸ்தான் இடையே அணுசக்தி உடன்பாடு

உலகிலேயே அதிகமாக யுரேனியம் வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் 2-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானுடன் இந்தியா விரைவில் அணுசக்தி உடன்பாட்டை மேற்கொள்ள உள்ளது. இந்தியா வின் வரும் குடியரசு தினவிழாவில் கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸரபயேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். அவரது இந்த வருகையின் போதே இருநாடுகளுக்கு இடையே யான அணுசக்தி உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 3 நாடுகளுடனும் இந்தியா ஏற்கெனவே அணுசக்தி உடன்பாட்டை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கஜகஸ்தானுடன் இந்தியா அணு சக்தி உடன்பாட்டை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவின் தானியங்கி அடையாளம் காணும் கருவி

கடல்பரப்பில் நடமாடும் சந்தேகத்துக்குரிய கப்பல்களையும், படகுகளையும் அடையாளம் காண உதவும் டிரான்ஸ்பான்டர் கருவியை இஸ்ரோ தயாரித்துள்ளது. இஸ்ரோ தயாரித்துள்ள இந்தக் கருவிக்கு தானியங்கி அடையாளம் காணும் கருவி (ஆன்ற்ர்ம்ஹற்ண்ஸ்ரீ ஒக்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம்) என்று பெயர். இது கனடா நாட்டு உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடலில் வரும் கப்பல் எந்த அளவில், எந்த வடிவில் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைத் துல்லிய மாக அறிய இது உதவும். கப்பலை அடையாளம் காண்பது மட்டும் அல்ல, அந்தக் கப்பலுக்கும் பிற கப்பல்கள் அல்லது துறைமுகங்களுக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை அறிந்து கொள்ளவும் இது உதவும். மேலும் இந்தியக் கடற் பரப்பில் இருப்பவை இந்தியக் கப்பல்களா, வெளி நாட்டுக் கப்பல்களா, நட்பு நாடுகளின் கப்பலா, எதிரி நாடுகளின் கப்பலா, வழக்கமான பயணிகள் போக்கு வரத்து-சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றுக்குப் பயன்படும் கப்பல்களா அல்லது சட்டவிரோதமான செயல்களுக்குப் பயன்படும் கப்பலா என்றெல் லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். 

Sunday, November 13, 2011

UNO




I.SÖ. TÖ‰L֐“ L°Áp¥ hµ«¥ ‘[°
TÖX͈]†‰eh I.SÖ. E¿‘]Ÿ A‹R͉ YZjhY‡¥ peL¥



I.SÖ. NÛT›¥ E¿‘]WÖL ÚNŸ†‰eÙLÖ·[e ÚLÖ¡ TÖX͈]• UÄÙNš‰ C£‹R‰.

 C‰ T¼½ ˜z° G|TR¼LÖL J£ hµÛY TÖ‰L֐“ L°Áp¥ AÛU†R‰. C‹R hµ«¥ J£–†R ˜z° G|eL ˜zVÖU¥ ‘[°Ty| E·[‰. CR]Ö¥ peL¥ H¼Ty| E·[‰.

ïRŸLºeh RÂ SÖ|

ïRŸLºeh GÁ¿ RÂSÖ| ÙLÖ|T‰ GÁ¿ CjfXÖ‹‰ ˜z° ÙNšRÚTÖ‰ AR¼LÖL TÖX͈]• SÖ| ‘¡eLTyP‰. A‡¥ J£ Th‡›¥ ïRŸLºeh SÖ| ÙLÖ|eLTyP‰. CR¼h TÖX͈ÂVŸL· N•U‡eLÖRRÖ¥ Ajh ÚTÖŸ SP‹R‰.

TÖX͈]• ˜µYÛR• ÛLT¼½V CÍÚW¥, TÖX͈]†ÛR RÁ Ly|TÖy|eh· ÙLց| Y‹R‰. A‰ ˜R¥ TÖX͈] UeL· RjL· SÖyzÁ «|RÛXeLÖL ÚTÖWÖz]ÖŸL·. 1988-• B| ‘WLP]†‡ÁTz A‰ rR‹‡W SÖPÖL A½«eLTyP‰. C‹R rR‹‡W ‘WLP]†ÛR AÙU¡eLÖ, CÍÚW¥, IÚW֐‘V SÖ|L·, I.SÖ. NÛT BfVÛY AjgL¡eL«¥ÛX. TX LyPUÖL SP‹‰ Y‹R AÛU‡ ÚTorYÖŸ†ÛR›¥ Ù^£NÚX• SLŸ VÖ£eh GÁT‰ ÙRÖPŸTÖL peL¥ zef\‰.

E¿‘]Ÿ A‹R͉

TÖX͈] SÖ| R]eh E¿‘]Ÿ A‹R͉ YZjL ÚY|• GÁ¿ LP‹R ÙNP•TŸ UÖR• I.SÖ. NÛT›¥ UÄ ÙNšR‰. C‹R UÄ —‰ ˜z° G|TR¼LÖL J£ hµ ŒV–eLTyP‰. C‡¥ TÖ‰L֐“ L°Áp¥ E¿“ SÖ|L[Ö] 15 SÖ|Lº• CP• ÙT¼\].

C‹R hµ iyP†‡¥ J£–†R ˜z° GyPTP«¥ÛX. CR]Ö¥ G‹R SPYzeÛLeh• T¡‹‰ÛW ÙNšVTP«¥ÛX. CR]Ö¥ C‹R ‘WopÛ] ‡£•T°• I.SÖ. TÖ‰L֐“ NÛT›Á ˜z°eh Y‹R‰.

AÙU¡eLÖ RÛP

C‹R ‘WopÛ]›¥ Ky| G|“ SP†‡ ˜z° LÖQXÖUÖ GÁT‰ h½†‰ TÖX͈]• RÖÁ ˜z° ÙNšVÚY|• GÁ¿ i\T|f\‰. Ky| G|“ SP†‡]Ö¥ AR¼h BRWYÖL 9 Ky|L· fÛP†‰ ÙY¼½ ÙT¼¿«P ˜z•. B]Ö¥ AR¼h C£eh• JÚW RÛP AÙU¡eLÖ RÖÁ.

AÙU¡eLÖ R]eh C£eh• W†‰ A‡LÖW†ÛR TVÁT|†‡ CÛR R|†‰ «P ˜z•. C‰ C¥XÖU¥ UÖ¼¿ Y³LÛ[• LÖQ ˜¼TPXÖ•. UÖ¼¿ Y³L¸¥ JÁ¿ E¿‘]WÖLÖU¥ TÖŸÛYVÖ[WÖL C£eL AÄU‡ ÚLÖWXÖ•.

AoN•

TÖX͈]†‰eh E¿‘]Ÿ A‹R͉ ÙLÖ|TR¼h AÙU¡eLÖ°•, CÍÚW¨• G‡Ÿ“ ÙR¡«efÁ\]. I.SÖ. E¿‘]WÖf «yPÖ¥, CÍÚW¥-TÖX͈]• AÛU‡ ÚTorYÖŸ†ÛR ÙY¼½ ÙT\Ö‰ GÁ¿•, YÁ˜Û\ ÙYzeh• GÁ¿• AÙU¡eLÖ Atrf\‰.

Saturday, November 12, 2011

இந்திய அறிவியல் மாநாடு




                 ரு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிப்பது அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைவரும் அறிந்ததே. அறிவியல் வளர்ச்சியை அதிகப்படுத்தி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகள் எடுத்து முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. நமது முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் கனவுப்படி 2020-க்குள் இந்திய தேசம் வல்லரசாக வேண்டுமெனில் அறிவியல் வளர்ச்சி மிகவும் முக்கியம்.

இந்தியாவில் அறிவியலை வளர்த்தெடுக்கவும், ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஏதேனும் சரியான ஓர் இடத்தில் அறிவியல் மாநாட்டினை நடத்தி அறிவியல் சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரை கள், பத்திரிகைகளை வெளியிட்டு அறிவியலை பிரபலப்படுத்தும் நோக்குடன் 1914-இல் துவங்கப்பட்டதுதான் இந்திய அறிவியல் கழக அமைப்பு. பிரிட்டிஷ் வேதியியலார்கள், பேராசிரியர் 
ஜே. எல். சைமன்சென் மற்றும் பேராசிரியர். பி.எஸ். மேக்மஹன் அவர் களின் அரிய முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் அறிவியல் மாநாட்டினை நடத்தி, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும் அதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகை செய்கிறது. இந்த அறிவியல் மாநாடானது ஒவ்வோர் ஆண்டும் வழக்கப்படி ஜனவரி முதல் வாரத்தில் பாரத பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்படுகிறது.

முதல் இந்திய அறிவியல் மாநாடு 1914-ஆம் ஆண்டு ஜனவரி 15-17 தேதிகளில் நீதியரசர் அசுதோஷ் முகர்ஜி அவர்களின் தலைமையில் கல்கத்தாவில் நடைபெற்றது. 

இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் 105 விஞ்ஞானிகள் கலந்துகொண்டு தாவரவியல், வேதியியல், இனவியல், புவி அமைப்பியல், இயற்பியல், விலங்கியல் என ஆறு துறைகளில் விவாதித்தனர்.

இந்திய அறிவியல் மாநாட்டின் வெள்ளிவிழா அமர்வானது 1938- இல் கல்கத்தாவில் லார்டு ரூதர்ஃபோர்டு ஆஃப் நெல்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

அவருடைய எதிர்பாராத மறைவால் சர் ஜேம்ஸ் ஜுன்ஸ் தலைமையேற்றார். 34-வது அறிவியல் மாநாடானது 1947, ஜனவரி 3-8 தேதிகளில் டெல்லியில் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 1963- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டெல்லியில் பேராசிரியர். டி.எம்.எஸ். கோத்தாரி அவர்களின் தலைமையில் அறிவியல் மாநாட் டின் பொன்விழா சிறப்புடன் கொண்டாடப் பட்டது.

 1973-ஆம் ஆண்டு ஜனவரி 3-9 தேதிகளில் அறிவியல் மாநாட்டினுடைய வைரவிழா டாக்டர்.எஸ். பகவந்தம் தலைமை யிலும், பவள விழாவானது 1988-இல் பேராசிரியர். சி.என். ஆர்.ராவ் அவர்கள் தலைமையிலும் கொண்டாடப்பட்டது. 

 தொடர்ந்து இந்த அறிவியல் மாநாடானது ஒவ்வோர் ஆண்டும் முனைப்போடு அறிவியல் ஆராய்ச்சியை மையப்படுத்தி இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. மாணவ, மாணவிகள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் வகையில் மாநாட்டில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டு அறிஞர்களும் பல கல்வியில் சிறந்த மேதைகளும் கலந்துகொண்டு மாநாட்டில் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்வது மாநாட்டுக்கு அணி சேர்க்கின்றது.

இந்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 98-வது இந்திய அறிவியல் மாநாடு சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் பேராசிரியர். கே. சி.பாண்டே அவர்களின் தலைமையில் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டது.
 இந்த மாநாட்டில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமர்த்தியா சென் உட்பட ஆறு நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகள், விண்வெளித்துறை விஞ்ஞானிகள், வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் என மொத்தம் 7,500 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். "தரமான கல்வி மற்றும் இந்தியப் பல்கலைக் கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சியின் தரத்தினை மேம்படுத்துதல்' என்ற மையக் கருத்தோடு அறிவியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் கருத்தரங்குகளில் சீரிய சிந்தனைக்கு வழி செய்தனர்.

ஜனவரி 3, 2011 அன்று நடந்த 98- வது இந்திய அறிவியல் மாநாட்டின் துவக்க விழாவில் பேசிய பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ""அறிவியலாளர்கள் புதுமையாக சிந்திக்க வேண்டும்'' என்று மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு  அழைப்பு விடுத்தார்.

மேலும் ""21-ஆம் நூற்றாண்டின் ராமன்களையும், ராமானுஜன்களையும் இந்தியா உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்த சூழல் எல்லா பல்கலைகழகங்களிலும் ஏற்படுத்த வேண்டும்'' என கூறி அறிவியல் வளர்ச்சியில் பல்கலைக் கழகங்களின் முக்கியப் பங்கினை வலியுறுத்தினார். ""பொருளாதார வளர்ச்சி, மக்களின் சுகாதாரம், நாட்டின் பாதுகாப்பு ஆகியவை அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை சார்ந்தே உள்ளன. ஆகவே அறிவியல் ஆராய்ச்சியின் தரத்தை மேம் படுத்துவது அவசியம்'' எனவும் பிரதமர் கூறினார்.

அறிவியல் மாநாட்டில் பேசிய மற்ற அறிவிய லாளர்களும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் அறிவியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தங்களின் அரிய கருத்துகளை அறிவியல் மாநாட்டில் முன்வைத்தனர். இந்த அறிவியல் மாநாட்டில் பல இளம் விஞ்ஞானிகளும், அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவியல் மாநாட்டில் தரமான கல்வியை வழங்குவதையும், இந்திய பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சியை வளப்படுத்துவதையும் முக்கிய மாக கருதி, இதில் அரசின் பங்கையும் இம்மாநாடு வலியுறுத்தியது.

12 கோடி ரூபாய் செல வில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த அறிவியல் மாநாடு பல இளம் மாணாக்கரிடம் அறிவியல் அறிவை வளர்த்து, அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயமு மில்லை. உலகில் வல்லரசாக இந்தியா மாறவேண்டுமெனில் அறிவியல் வளர்ச்சி மிகவும் முக்கியம். 1914-இல் துவங்கப்பட்ட இந்திய அறிவியல் மாநாடு நூறாண்டை நோக்கி சிறப்புடன் அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றது. மாநாட்டில் விவாதிக்கப்பட்டதுபோல அறிவிய லாளர்கள் புதுமையாகச் சிந்தித்து பல புதிய சாதனைகளை இப்புவிதனிலே புரிந்திட வேண்டும். 

அடுத்த 99-வது இந்திய அறிவியல் மாநாடா னது 2012-ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 7 தேதிகளில் புவனேஷ்வரில் நடைபெற உள்ளது.

 அதில் அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்கினை மையமாகக் கொண்டு விவாதிக்கப்படும்.

எல்லா கல்வி நிலையங்களிலும் குறிப்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அறிவியல் ஆராய்ச்சி அதிகப்படுத்தப்பட வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியை வளர்த்தெடுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு, மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நம் தேசத்தின் வளர்ச்சிக்கு அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மிக முக்கியம். தொடர்ந்து இந்திய அரசும் அதிக முயற்சிகள் எடுத்து அறிவியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப் படுத்தி அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அறிவியல் வளரட்டும், அகிலத்தில் அநேக வளர்ச்சி பெற்று இந்தியா ஒளிரட்டும்!

2018 -ல் காமன்வெல்த் போட்டி




KyÙP|‘¥ CXjÛL ÚRÖ¥«
2018 LÖUÁÙY¥† «Û[VÖy| ÚTÖyz B͇ÚW¦VÖ«¥ SÛPÙT¿f\‰

2018-• B| LÖUÁÙY¥† «Û[VÖy| ÚTÖyz B͇ÚW¦VÖ«¥ SÛPÙT¿• GÁ¿ A½«eLTy|·[‰. CR¼LÖ] YÖeÙL|‘¥ CXjÛL ÚRÖ¥«ÛV N‹‡†R‰.

2018 LÖUÁÙY¥† «Û[VÖy|

1930-• B| ˜R¥ LÖUÁÙY¥† «Û[VÖy| ÚTÖyzL· 4 B|Lºeh J£ ˜Û\ SP†RTy| Y£f\‰.

LÛPpVÖL LÖUÁÙY¥† «Û[VÖy| ÚTÖyz ÙP¥¦›¥ LP‹R B| (2010) SP‹R‰. 

A|†R LÖUÁÙY¥† «Û[VÖy| ÚTÖyz ÍLÖyXÖ‹‡¥ E·[ f[ÖÍÚLÖ SL¡¥ 2014-• B| (^ØÛX 23 ˜R¥ BLÍ| 3) SPef\‰.

2018-• B|eLÖ] LÖUÁÙY¥† «Û[VÖy| ÚTÖyzÛV G‹R SÖ| SP†‰Y‰ GÁTÛR ˜z° ÙNšV LÖUÁÙY¥† «Û[VÖy| ÙTPÚWcÁ iyP• ÙYÍy C{p¥ E·[ ÙN›Áy fyÍ ˆ«¥ SP‹R‰. ÚTÖyzÛV SP†‰• E¡ÛUÛV ÙT\ B͇ÚW¦VÖ (ÚLÖ¥| ÚLÖÍy), CXjÛL (a•TÁÚPyPÖ) BfV SÖ|L· ÚTÖyz ÚTÖyP].

B͇ÚW¦VÖ«¥ SÛPÙT¿•

ÚTÖyzÛV SP†‰• SÖ| G‰ GÁTÛR ŒŸQ›eL WLpV KyÙP|“ SP†RTyP‰. ÙUÖ†R• 71 SÖ|L· ÙLցP C‹R AÛU‘¥ 42 SÖ|L· B͇ÚW¦VÖ°eh BRWYÖL YÖeL¸†R]. CXjÛLeh 27 Ky|LÚ[ fÛP†R].

CR]Ö¥ 2018-• B|eLÖ] 21-Y‰ LÖUÁÙY¥† «Û[VÖy| ÚTÖyz B͇ÚW¦VÖ«¥ (ÚLÖ¥| ÚLÖÍy) SÛPÙT¿• GÁ¿ LÖUÁÙY¥† «Û[VÖy| ÙTPÚWcÁ ÚS¼¿ A½«†R‰. C‹R ÚTÖyz ÚLÖ¥| ÚLÖÍz¥ HW¥ 4-‹ ÚR‡ ˜R¥ 15-‹ ÚR‡ YÛW SÛPÙT¿f\‰.

C‹R ÚTÖyzÛV SP†R CXjÛL L|• ˜V¼p ÚU¼ÙLցP‰. A‹R SÖyzÁ ‘WTX f¡eÙLy ®WŸ ˜W¸RWÄ• CR¼h BRWYÖL ÙNV¥TyPÖŸ. C£‘Ä• CXjÛLVÖ¥ ÚTÖ‡V E¿“ SÖ|L¸Á BRWÛY ÙT\ ˜zVÖU¥ HUÖ¼\• L|·[‰. LÖUÁÙY¥† «Û[VÖy| iyP†‡¥ LX‹‰ ÙLցP CXjÛL ÚRpV J¦•‘e L–yz ÚNŸUÁ ÚaUÖp¡ ÙTŸ]ցÚPÖ i¿ÛL›¥, `WLpV KyÙP|‘¥ LÛPp LyP†‡¥ UÖ¼\• H¼Ty|·[‰. SÖjL· GjLºeh S¥X BRW° fÛPeh• GÁ¿ S•‘ C£‹ÚRÖ•. GjL[‰ ÚRÖ¥«eLÖ] LÖWQ• ÙR¡V«¥ÛX. C‹‡VÖ«P•, ÛSÉ¡VÖ (20 Ky|L·) ÚRÖ¼\ÛR «P SÖjL· A‡L Ky|L· ÙT¼¿·Ú[Ö•' GÁ¿ ÙR¡«†RÖŸ.

5-Y‰ ˜Û\VÖL
LÖUÁÙY¥† «Û[VÖy| ÚTÖyzÛV SP†‰• E¡ÛUÛV ÙT¼¿ C£T‰ h½†‰ Uf²op ÙR¡«†‰·[ B͇ÚW¦V ‰ÛQ ‘WRUŸ ÙYšÁ ÍYÖÁ «|†‰·[ ÙNš‡e h½‘¥, `C‹R ÙY¼½ ÚLÖ¥| ÚLÖÍ|eh p\TÖ]RÖL AÛU•.
 5-Y‰ ˜Û\VÖL LÖUÁÙY¥† «Û[VÖy| ÚTÖyzÛV B͇ÚW¦VÖ SP†R E·[‰. 
C‹R ÚTÖyzÛV C‰YÛW SÖjL· Uy|ÚU A‡L ˜Û\ SP†‡ C£efÚ\Ö•. 
ÙT¡V NŸYÚRN «Û[VÖy| ÚTÖyzLÛ[ p\TÖL SP†‰YRÖ¥ GjLºeh C‹R YÖš“ fÛP†‰ C£ef\‰. C‹R ÚTÖyz ÚLÖ¥| ÚLÖÍzÁ r¼¿XÖ°eh ÙT¡V FeL†ÛR A¸T‰PÁ ÚYÛXYÖš“LÛ[ ÙT£eh•' GÁ¿ ÙR¡«†‰·[ÖŸ.

நிறைவு பெற்றது "சார்க்' மாநாடு:

நிறைவு பெற்றது "சார்க்' மாநாடு: முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேறின

First Published : 12 Nov 2011 12:00:00 AM IST


மாலத்தீவு மராதூ பகுதியில் இந்திய நினைவுச் சின்னத்தை திறந்து வைத்துப் பார்வையிடும் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குருசரண் கெüர்.
அட்டு (மாலத்தீவு), நவ. 11: தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு, வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. இதில் பல முக்கியமான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.8 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாடு மாலத்தீவுகளின் அட்டு நகரில் வியாழக்கிழமை தொடங்கி இருநாள் நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி, இலங்கை அதிபர் ராஜபட்ச, நேபாள பிரதமர் பாபுராம் பட்டராய், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், மாலத்தீவுகள் அதிபர் முகமது நசீத் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.இதில் தெற்காசிய நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமாக வர்த்தகத்தில் வரியல்லாத பிறதடைகளையும், உபரி வரிகளையும் நீக்குவது, தடையற்ற வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறின.மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் மாநாட்டை நடத்திய நாடான மாலத்தீவுகளின் அதிபர் நசீத் இதனை அறிவித்தார். நமது உறுப்பு நாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக, வரியல்லாத பிற தடைகளை நீக்குவது, உபரி வரிகளைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். இது தொடர்பாக சார்க் நாடுகளின் அமைச்சர்கள் குழு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்.வளர்ச்சி குறைந்த நாடுகளுடனான வர்த்தகத்தில் வரிவிதிப்பு தடைகளை பெருமளவில் குறைப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இதனை வரவேற்கிறோம்.உறவுப் பாலம் அமைப்போம் என்ற மையநோக்குடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், சார்க் நாடுகளிடையே மூலதன பரிமாற்றத்தை அதிகரிப்பது தொடர்பாக நிதியமைச்சர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவது என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிராந்திய ரயில்வே ஒப்பந்தம், மோட்டார் வாகன ஒப்பந்தம் ஆகியவற்றில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தெற்காசிய அஞ்சல் அமைப்பை ஏற்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும்போதும், கடற்கொள்ளை போன்ற அசம்பாவிதங்களின் போதும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும், விரைவில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இயற்றப்பட்டுள்ளது என்று நிறைவு உரையில் மாலத்தீவு அதிபர் நசீத் தெரிவித்தார்.இப்போது நடைபெற்றது 17-வது சார்க் மாநாடு. அடுத்த மாநாடு நேபாளத்தில் 2012-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, November 10, 2011

தமிழ் நாட்டின் திட்டமிடல் கொள்கை





           ந்தியாவில் திட்டமிடல் முறையில்  பல முற்போக் கான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பொருளாதாரத் திட்டமிடல் என்பது அரசியலும், பொருளாதாரமும் இணைந்த ஓர் இயங்கியல் அணுகு முறையாகும். கடந்த 57 ஆண்டுகளில் திட்டமிடல் முறையில் மாநிலங்களின் பங்கு முதன்மை பெற்று வருகிறது. மாநிலத் திட்டக்குழுவை இந்தியாவிலேயே முதன் முறையாக 1971-ஆம் ஆண்டில், தமிழ் நாட்டின் சமுதாய, பொருளாதாரத் தளத்தில் திட்டமிடல் கொள்கை புதிய உந்துதலைப் பெற்றது. தமிழ் நாடு பல்வேறு துறைகளில் சீரான வளர்ச்சியை எட்டு வதற்கு இது வழிகோலியது.

1920-ஆம் ஆண்டு முதல் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தே தமிழ்நாடு, சமூகநீதிக் கொள்கையைக் கடைப் பிடித்து, கல்வி, வேலைவாய்ப்புகளில் சமுதாயத்தின்அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. இதன் தொடர்ச்சி யாக, நாடு விடுதலை அடைந்த பின்னரும், வேளாண்மை, தொழில், பணித் துறைகளின் முன்னேற்றத்திற்கும், சமுதாய நலத்திட்டங் கள் சிறப்புற நிறைவேறுவதற்கும் தமிழ்நாடு அரசு திட்டங் களைத் தீட்டி செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் எளிய மக்கள் பங்கு பெற்றுப் பயனடைவதில்தான் உண்மையான சமூக, பொருளாதார மாற்றத் தையும், சமத்துவத்தையும் காணமுடியும். இந்த அணுகுமுறையின் அடிப்படையில் பதினோ ராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்கி, ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை அறிக்கையை 2006-ஆம் ஆண்டில் மாநிலத் திட்டக் குழு வெளியிட்டது. 

மாநிலத் திட்டக்குழு ஒவ்வொரு வல்லுநர் குழுக்களை அமைத்தது அரசுத் துறைத் தலைவர்கள், வல்லுநர்கள் ஆகியோர்  இக்குழுக்க ளில் இடம்பெற்று, திட்டத்திற் கான கருத்துக்களை வழங்கினர். அனைத்து தரப்பினரின் கருத்துக்களைப் பெற்ற திட்டக் குழுவானது அவற்றை ஆய்ந்து பதினோ ராவது ஐந்தாண்டுத் திட்டத்தை ஒரு "மக்கள் திட்டமாக' வடிவமைத்துள்ளது.  

நாட்டின் வளர்ச்சிக் காரணிகளை உரிய முறையில் சீரமைத்து, அனைத்துத் துறை களிலும் உள்ள வேறுபாடு களை நீக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதே திட்டமிடுதலின்கொள்கைகளும், செயல்பாடுகளும் ஆகும். இந்த உயரிய நெறிகளைப் பின்பற்றி தமிழ்நாடு சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியை அடைவதில் வெற்றி பெற்று வருகிறது. சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியைக் குறிக் கோளாகக் கொண்ட தமிழகம், நிலையான வளர்ச்சியடைந்து, இந்திய மாநிலங்களுக் கிடையே சமூக- பொருளாதாரத் தளங்களில் முற்போக்கான மாநிலமாகத் திகழ்கிறது. சமூகநீதியின் உயர் நெறியான இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றி, சமூகநலத்துறை களில் பொதுச் செலவைப் பெருக்கி, கடந்த 100 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளும், திட்டங்களும் தமிழ் நாட்டில் இயைந்த வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றன. துறைவாரியான வளர்ச்சி நிலை களில் மேம்பாடு காணப்பட்டாலும், சில துறைகளின் வளர்ச்சிப் போக்கில் ஏற்ற இறக்கங்கள் தென்படுகின்றன. நாடு விடுதலை அடைந்த போது, ஒருவேளாண் பொருளாதாரமாக இருந்த தமிழகம், இன்று தொழில், பணித் துறைகளின் முன்னேற்றத்தினால், நவீனப் பொருளாதாரமாகத் திகழ்கிறது வேளாண் துறை சந்திக்கும் எல்லாவித இடர்ப்பாடு களையும் களைந்து, அவ்வப்போது, பருவ மழையின்மை, வெள்ளப் பெருக்கு ஆகிய காரணிகளால், எழுகின்ற சிக்கல்கள்அனைத்தையும் தீர்ப்பதற்கான செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண் துறையில் அதிக வளர்ச்சி அடைவதே, ஊரகப் பகுதிகளில் வருமானத்தை அதிகரிப் பதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் உரிய திறவுகோலாகும். மேலும், வேளாண் துறையில் முன்னேற்றமானது, தொழில்நுட்பத்தின் வழியாகவும், விவசாயி களின் மேம்பாட்டு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டும் அமைந்திடல் வேண்டும். பதினோராவது திட்டக்காலத்தில் தமிழ்நாடு 9 விழுக்காடு வளர்ச்சி அடை வதற்கு இலக்குகள் வகுக்கப் பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிற மனிதவளர்ச்சிக் குறியீடுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, மாவட்டங்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைய செயல் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். முக்கியமான பொருளாதாரக் குறியீடுகளைக் கவனிக்கும் பொழுது, பொருளாதார முன்னேற்றம் கடந்த பத்தாண்டுகளில், ஆண்டுதோறும் 5.8 விழுக்காடாகவும், மக்கள்தொகை வளர்ச்சி 0.9 விழுக்காடாகவும், வேலைவாய்ப்பின்மை 1999-2000, 2004-05 ஆகிய ஆண்டுகளுக் கிடையே 0.25 விழுக்காடாகவும் இருந்தது. எனவே, இத்திட்டக்காலத்தில், வேலை வாய்ப்பை ஏற்படுத்து வதிலும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும், ஊரக, நகர்ப்புற மக்களின் வாழ்க்கைநிலையை உயர்த்துவதிலும் புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

திட்டமானது, நீடித்த, சுற்றுச் சூழல் மேம்பாட்டுடன் கூடிய வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. நீடித்த, சமச்சீரான பொருளாதார வளர்ச்சிக் காரணிகளையும் இணைத்து தமிழ்நாடு மேம்பாடடைவதற்கு ஏற்ப இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாவது திட்டக்காலத்தில் மாநிலத்தின் பொருளாதார நிலை பொருளாதார வளர்ச்சி பத்தாவது திட்டக் காலத்தில் தமிழ்நாடு, ஆண்டுதோறும் 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, உண்மை விலையில் (ஏநஉட ண்ய்  ழ்ங்ஹப்  ற்ங்ழ்ம்ள்) அடையும் என எதிர் பார்க்கப்பட்டது. எனினும் 6.8 விழுக்காடு வளர்ச்சியையே அடைய முடிந்தது. மோசமான பருவநிலை, இயற்கைச் சீரழிவு ஆகியவற்றால் முதன்மைத் துறையின் வளர்ச்சி குறைந்ததே இதற்கு காரணமாகும். பொருளாதாரமானது ஒன்பதாவது திட்டக்காலத்தில் ஆண்டு தோறும் சராசரியாக 4.8 விழுக்காடு வளர்ச்சியையும், பத்தாவது திட்டக் காலத்தில் 6.8 விழுக்காடு வளர்ச்சி யையும் எட்டியது. பத்தாவது திட்டக் காலத்தில் மூன்றாம் துறை 7.7 விழுக்காடு வளர்ச்சி பெற்றது. முதன்மைத் துறை ஆண்டுதோறும் 2.57 விழுக்காடு குறைந்த வளர்ச்சியைப் பெற்றதால் பொருளா தாரத்தில் பின்னடைவு ஏற்பட காரணமாக அமைந்தது. இரண்டாம் துறை 7.5 விழுக்காடு என்ற வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது.

தலா வருமானம் 

தமிழ்நாடு 2004-05ஆம் ஆண்டு தலா வருமானத்தில், தேசிய அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்தது. ஒன்பதாவது திட்டக் காலத்தில் எய்திய 3.5 விழுக்காடு வளர்ச்சி யுடன் ஒப்பிடும்பொழுது பத்தாவது திட்டக் காலத்தில் ஆண்டுதோறும் 5.7 விழுக்காடு வளர்ச்சி எய்தப்பட்டுள்ளது. 

வேளாண் துறை

வேளாண் துறையானது மாநில, தேசிய அளவில் ஊரக மக்களுக்கான முக்கிய வாழ்வாதாரமாக விளங்குகிறது. வளர்ச்சியில், வேளாண்துறையின் பங்கு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந் தாலும், பொருளா தாரத்தில் அத்துறை உருவாக்கும் தாக்கத் தைக் குறைத்து மதிப்பிடமுடியாது.
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் வேளாண்மைக்கும் அதன் துணைத் துறைகளுக்கும் 4 விழுக்காடு வளர்ச்சியும், ஆண்டுதோறும் 106.38 இலட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானிய உற்பத்தியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கக் காலங்களில் காணப்பட்ட வறட்சி காரணமாக இந்த இலக்கைவிட குறைவான வளர்ச்சியையே அடைய முடிந்தது. 

கடுமையான வறட்சி, வெள்ளம், சுனாமி ஆகியவற்றின் காரணமாக பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் கால இலக்கான 106.38 இலட்சம் மெட்ரிக் டன்கள் உணவு உற்பத்தியை அடைய முடியவில்லை. பத்தாவது திட்டக் காலத்தில் சராசரி உணவு தானிய உற்பத்தியானது 63.78 இலட்சம் மெட்ரிக் டன்னாகும். இது ஒன்பதாவது திட்டக் கால உற்பத்தியான 85.33 இலட்சம் மெட்ரிக் டன்னைவிடக் குறைவானதாகும். 

 இந்தியாவில், மக்களின் நிலவுடைமை அளவு குறைவாகவுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். சராசரி நிலவுடைமை 1976-77இல் 1.25 எக்டேராக இருந்தது. தற்போது 1 எக்டேராகக் குறைந்துள்ளது. மேலும் 59 ஆவது தேசிய மாதிரி ஆய்வான ""விவசாய குடும்பங் கள் கடன்படுதல் மூலம் விவசாய குடும்பங்கள் அதிகளவு கடன்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு சிறு-குறு விவசாயிகளின் தனித்தன்மை வாய்ந்த, நலிவுற்ற நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. 

தொழில் துறை  

பத்தாவது திட்டக் காலத்தில் இரண்டாம் துறையின் இலக்கு 7.12 விழுக்காடாக இருந்த போதிலும், இத்துறை ஆண்டுதோறும் 7.5 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது. இது ஒன்பதா வது திட்ட காலத்தில் 
அடைந்த வளர்ச்சி வீத மான 2.15 விழுக்காட் டைக் காட்டிலும் குறிப் பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இரண்டாம் துறையின் உற்பத்தித் துறை வளர்ச்சி வீதமானது 8.19 விழுக்காடாகவும், கட்டுமானத் துறையின் வளர்ச்சி வீதம் 6.4 விழுக்காடாகவும் உள்ளது. 

 இத்தொழில்களின் வளர்ச்சி ஆற்றலைப் போற்றி வளர்த்தெடுப்பது பதினோராவது திட்டக் காலத்திலும் தொடரவேண்டும். பதிவு செய்யப்படாத தொழில் உற்பத்தி துறை ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சி பெற்று வரினும், உள்கட்டமைப்பு வசதிகள், கடன், தொழில்நுட்பம் ஆகியவை போதிய அளவு கிடைக்காத காரணத்தால், இத்துறை பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலைமை உள்ளது. இத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் அதைக் களைய உரிய நடவடிக்கைகளைப் பதினோராவது திட்டக் காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.


பணித்துறை பத்தாவது திட்டக் காலத்தில் மூன்றாம் துறையின் வளர்ச்சி இலக்கு 9.77 விழுக் காடாக நிர்ணயிக்கப்பட்டது. திட்டக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்த முடியாவிட்டாலும், பொருளாதாரத்தில் இத்துறை பெரும் தாக்கத்தை சந்தேகத்திற் கிடமின்றி ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் துறையானது வேகமாக வளரும் துறையாகும். ஒன்பதாவது திட்டக் காலத்தில் எய்தப்பட்ட 6.98 விழுக் காடு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது பத்தாவது திட்டக் காலத்தில் 7.72 விழுக்காடு வளர்ச்சி எய்தப்பட்டது. 2004-05-இல் உயர்ந்த அளவான 11.62 விழுக்காட்டை எட்டியது. பணித்துறையின் வளர்ச்சிக்கு காரணமான  அதன் உட் பிரிவான தகவல் தொடர்பில் 14.8 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. பணித்துறையின் வளர்ச்சியானது மாநிலப் பொருளாதாரத்தின் அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினி மென்பொருள், வன்பொருள் உற்பத்தியில் தமிழ்நாடு நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2005-06 இல் ரூ.14,115 கோடி அளவுக் குத் தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளது. இதன் அளவு 2006-07இல் ரூ.20,700 கோடியாக உயர்ந்துள் ளது. இத்துறையினால் வேலை வாய்ப்பு பெருகுவதால் இதன் வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. எனினும், வேளாண்மை சாராத துறை வளர்ச்சியின் விளைவாக ஊர்ப் புறங்களில் இருந்து பெரிய நகரங் களுக்குத் தொழி லாளர்கள் பெருமள வில் வருவதை வேளாண்மை சாராத துறையை அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கச் செய்வ தன் வாயிலாகவும், நகர்ப்புறத்திற்கு நல்ல குடிமை வசதிகளை அளிப்பதன் வாயிலாகவும் எதிர்கொள்ள இயலும்.

மக்கள்தொகை வளர்ச்சி


மாநிலத்தின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு 6.24 கோடியாக உள்ளது. கடந்த பத்தாண்டுக் காலத்தில் இதன் வளர்ச்சி வீதம் 11.72 விழுக்காடாகும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இந்த வளர்ச்சி வீதத்தை 11.72 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக 2011-ஆம் ஆண்டில் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் கணிக்கப் பட்ட மக்கள் தொகை விவரப்படி பதினோராவது திட்ட இறுதியில் மக்கள் தொகையானது 6.79 கோடியாக இருக்கும் எனத்தெரிகிறது. இதன்படி 2001இலிருந்து 2012 வரை வளர்ச்சி வீதம் 8.7 விழுக்காடு ஆக இருக்கும். இந்த கணிப்பின்படி ஊர்ப்புறங் களில் மக்கள் தொகை 13.4 விழுக்காடு குறைந்தும், நகரப் பகுதிகளில் 37 விழுக்காடு அதிகரித்தும் காணப்படும்.


உள்கட்டமைப்பு


தமிழகத்தில் சாலைவசதியானது 1,88,700 கி.மீ உள்ளது. மேலும் சாலை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தற்போது முன்னணி வகிக்கிறது. மாநிலத்தில் சாலை அடர்த்தியானது ஒரு இலட்சம் மக்கட்தொகைக்கு 286 கி.மீ. எனவும், 100 ச.கி.மீட்டருக்கு 137 கி.மீ. எனவும் உள்ளது. இது தேசிய அளவில் முறையே 258 கி.மீ., 75 கி.மீ.ஆக உள்ளது. பத்தாவது திட்டக் காலத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள குடியிருப்புகள் அனைத் திற்கும் அனைத்து பருவங்களுக் கும் ஏற்ற சாலைகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. 


 பத்தாவது திட்டக் காலத்தில், மின்சாரம், சாலை, தொலைபேசி, இணையதளம், பள்ளி, தூய்மையான நீர், துப்புரவு வசதிகளை 2010ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டது. பழைய வரையறைப்படி அனைத்து ஊர்ப்புறங்களும் மின்சார வசதி பெற்றுள்ளன. மேலும், தமிழகத்தின் அனைத்து ஊர்ப்புறங்களும் கிராம பொது தொலைபேசி வசதி பெற்றுள்ளன.


குடிநீர்


பத்தாவது திட்டத்தில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கத் திட்டமிடப்பட்டது. மாநிலத்தில் ஊர்ப்புறங் களில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு 40 லிட்டர் வழங்க முன்னுரிமை தரப்பட்டது. எனினும், 2006 செப்டம்பரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 86981 ஊர்ப்புறக் குடியிருப்புகளில் 50529 குடியிருப்புகளுக்கு மட்டுமே முழுமையான குடிநீர் வழங்கப் பட்டது. (40 டஸ்ரீக், அதற்கு மேல்), 35241 குடியிருப்புகளுக்கு பகுதியளவே வழங்கப் பட்டது. 1211 குடியிருப்புகளுக்கு குறைந்த அளவு குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டது. குடிநீர் வழங்கல் வசதியினை அடிப்படை யாகக் கொண்டு நகரங்கள் நன்று, சராசரி, தாழ்வு என தரம் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சென்னை மாநகராட்சி நீங்கலாக 718 நகர உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அவற்றில் 382 நன்று எனவும், 307 சராசரி எனவும் 29 தாழ்வு எனவும் தரம் பிரிக்கப் பட்டுள்ளன.


காடுகள்


2012-ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 25 விழுக்காடு காடுகள் நிறைந்த நிலப்பரப்பாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2006இல் 22877 சதுர கிலோமீட்டர் பரப்பு மாநிலத்தின் காடுகளாக இருக்கின்றன. இது மொத்த நிலப்பரப்பில் 17.59 விழுக்காடாகும். இருப்பினும் 2003-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காடுகள் பற்றிய கணக்கெடுப்பின்படி காடுகள், மரங்கள் சூழ்ந்தபகுதி, மொத்த நிலப்பரப்பில் 21.25 விழுக்காடாக உள்ளது.


முதலீடு


பத்தாவது திட்ட காலத்திற்கான முதலீடு ரூ.2,62,502 கோடி என மதிப்பிடப்பட்டது. அதில் மாநிலம் ரூ.40,000 கோடியை மாநில நிதியிலிருந்தும், ரூ.48,000 கோடியை மத்திய நிதியிலிருந்தும் பெற வேண்டியிருந்தது. எனவே, மாநிலம் மீதமுள்ள ரூ.1,74,502 கோடிக்கு தனியார் முதலீட்டையும், வெளி நாட்டு நேரடி முதலீட்டையும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதில் மாநிலத் திட்ட ஒதுக்கீடான ரூ.40,000 கோடியில் ரூ.37,689.79 கோடி வரவு, செலவுத் திட்டத்தில் (உண்மை நிலையில்) ஒதுக்கப்பட்டது. இது 94.22 விழுக்காடாகும்.


நிதிச் செயற்பாடு


பத்தாவது திட்டக் காலத்தில் தமிழகத்தின் திட்ட ஒதுக்கீடு ரூ.40000 கோடியாக, 2001-02ஆம் ஆண்டு விலையில் நிர்ண யிக்கப்பட்டது. மாநிலம் நடப்பு விலையில் திட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக செலவு செய்துள்ளது. ஆனால் 2001-02 விலையில் 94.2 விழுக்காடு மட்டுமே செலவு செய்ய முடிந்தது. 


பத்தாவது திட்டக்காலத்தில் குடிநீர் வழங்கல், வீட்டு வசதி, நகர மேம்பாடு கல்வி, உடல்நலம் ஆகிய சமூகப் பணிகளுக்கு முன்னுரிமை தந்து 33 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரம், சாலை, போக்குவரத்து முதலான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 38 விழுக்காடும், வேளாண்மை, ஊரக மேம்பாட்டிற்கு 26 விழுக்காடும் ஒதுக்கப்பட்டது. பத்தாவது திட்டக் கால வருவாய் வரவில் செயலாக்கத்தின்போது உள்கட்டமைப்புக்கு வழங்கப்பட்ட முன்னுரி மையில் சிறிய அளவில் மாற்றம் அடைந்து சமூக நலத்திற்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது. 


நிதி ஆதாரங்கள்


தமிழ்நாட்டின் நீடித்தப் பொருளாதார வளர்ச்சிக்காக பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு, ரூபாய் 85344 கோடி நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத் தொகை பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட நிதி ஒதுக்கீடான ரூபாய் 40000 கோடியை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. 


இந்த திட்டநிதி ஒதுக்கீடு கீழ்க்காணும் இனங்களின் அடிப்படையில் அமையும். 1) மாநிலத்தின் சொந்த நிதியாதாரத்திலிருந்து திரட்டப்படும் நிதியளவு ரூ.17498.78 கோடியாகும். 2) நடுவண் அரசின் நிதியுதவி ரூ.15873.19 கோடியாகும். 3) மாநிலம் எழுப்பும் கடன் வழியாக பெறப்படும் நிதி ரூ.55708.50 கோடியாகும். 4) மாநில பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்மறை பங்களிப்பு ரூ. 5336.47 கோடி. 5) உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு ரூ.1600 கோடி. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 2006-07-ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் மொத்த முதலீடு ரூ.649330 கோடியாகும். இத் தொகையில் மாநிலத்தின் முதலீடு ரூ.85344 கோடியாகும். பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் நடுவண் அரசுத் துறைகளின் முதலீடு ரூ.128935 கோடியாக இருக்கும். இத்தொகை பத்தாவது ஐந் தாண் டுத் திட்டத்தின் மதிப்பீடான 18 விழுக்காட்டை விட அதிகரித்து 20 விழுக்காடாக அமையும். இந்த மொத்த முதலீட்டுத் தொகையில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ.435051 கோடியாக இருக்கும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தனியார் முதலீட் டின் பங்களிப்பான 66 விழுக் காட்டைவிட, ஒரு விழுக்காடு உயர்ந்து, பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் மொத்த முதலீட்டில் தனியார் துறையின் பங்களிப்பு 67 விழுக்காடாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.