
கிழக்கு ஆசிய நாடுகளிடையே உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து புறப்படும் முன்பாக பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட றிக்கையில், ‘ஆசியா நாடுகள் உடனான இந்தியாவின் வர்த்தக, தொழில் உறவுகள் மேலும் பலப்பட இந்திய & ஆசியன் உச்சி மாநாடு உதவும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவு பற்றி மன்மோகன் பேச்சு நடத்துகிறார்.
மாநாட்டை முடித்து கொண்டு இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு மன்மோகன் சிங் செல்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர் லீ சின் லூங்கை சந்தித்து பேசுகிறார். பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, கலசார ரீதியான உறவுகளை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கின்றனர். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு 21ம் தேதி மன்மோகன் நாடு திரும்புகிறார்.
No comments:
Post a Comment