
இந்த நிலையில், இந்த நகல் மசோதாவில் மாற்றங்கள் செய்வது பற்றி மாநில அரசுகள் மற்றும் பல்வே று அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், மானிய விலையில் மக்களுக்கு உணவு தானியங்களை 3 கிலோவுக்கு அதிகமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த சலுகையை பாலூட்டும் தாய்மார்கள், ஆதரவற்றவர்கள்,
முதியோர்களுக்கு கிடைக்கவும்,
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது 52 மாவட்டங்களில் மட்டும் அமலில் உள்ளது. இது நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது. இவ்வாறு கே.வி.தாமஸ் கூறினார்.
No comments:
Post a Comment