
புதுடெல்லி : அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி (70) இன்று காலையில் மரணமடைந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அவரது உடல் நிலை மோசமானது. இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இந்திரா கோஸ்வாமி, கடந்த 2000ம் ஆண்டு இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞான பீட விருது பெற்றவர். அவர் எழுதிய புத்தகங்கள், நாவல்கள் பல்வேறு விருதுகளை வென்றுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக அசாமை உலுக்கி வரும் உல்பா தீவிரவாத பிரச்னையை தீர்க்க அமைதி பேச்சுவார்த்தைக்கு இவர் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment